Don't Miss!
- Technology நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர் டா.. ChatGPT-க்கு செக் வச்ச Google.. இனி மொபைல் யூசர்கள் Gemini பக்கம்!
- Automobiles கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
- News ‛‛முகத்தில் மாஸ்க்’’.. அடையாளத்தை மறைத்து நீதிமன்றத்தில் ஆஜரான நடிகை யாஷிகா ஆனந்த்.. என்ன மேட்டர்?
- Lifestyle உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற அற்புதமான டிப்ஸ்..
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ராஜ்குமார் போல ரஜினியையும் கடத்தத் திட்டமிட்டாரா வீரப்பன்?.. ராம் கோபால் வர்மா புதுத் தகவல்!
ஹைதராபாத்: சந்தனக் கடத்தல் வீரப்பன், நடிகர் ரஜினிகாந்தை கடத்தத் திட்டமிட்டிருந்ததாக இயக்குநர் ராம் கோபால் வர்மா ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு, கர்நாடகா என 2 மாநிலங்களையும் ஆட்டிப்படைத்த சந்தனக் கடத்தல் வீரப்பனை கடந்த 2004 ம் ஆண்டு அக்டோபர் 18 தேதி வீரப்பனை தருமபுரி மாவட்டம் பாப்பரப்பட்டி அருகே தமிழக காவல்துறை அதிகாரி விஜயகுமார் சுட்டுக் கொன்றது குறிப்பிடத்தக்கது.
இதனை அடிப்படையாக வைத்து 'கில்லிங் வீரப்பன்' என்ற படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம் என 3 மொழிகளில் ராம் கோபால் வர்மா இயக்கியிருக்கிறார்.
கில்லிங் வீரப்பன்
தமிழ்நாடு, கர்நாடகா என 2 மாநிலங்களையும் ஆட்டிப்படைத்த சந்தனக் கடத்தல் வீரப்பனின் வாழ்க்கையை மையமாகக்கொண்டு, 'கில்லிங் வீரப்பன்' என்ற படத்தை ராம் கோபால் வர்மா இயக்கியிருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம் என 3 மொழிகளில் உருவாகியிருக்கும் இப்படம் வருகின்ற மே 27 ம் தேதி வெளியாகிறது.
சிவராஜ்குமார்
பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் இப்படத்தில் வீரப்பனை சுட்டுக் கொல்லும் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். வீரப்பன் வேடத்தில் சந்தீப் பரத்வாஜும், வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி வேடத்தில் யாக்னா ஷெட்டியும், வீரப்பனால் சுட்டுக் கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரியாக ராக்லைன் வெங்கடேஷும் நடித்துள்ளனர்.
ராஜ்குமார்
பிரபல கன்னட நடிகரான ராஜ்குமாரை வீரப்பன் கடத்தி அவரை பணயக் கைதியாக 100 நாட்களுக்கும் மேல் வைத்திருந்து விடுதலை செய்தார். ராஜ்குமாரின் மகன் சிவராஜ்குமார் வீரப்பனை சுட்டுக்கொல்லும் போலீஸ் அதிகாரியாக இப்படத்தில் நடித்திருக்கிறார். இதனால் கர்நாடகா மாநிலத்தில் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
ரஜினிகாந்த்
இந்நிலையில் எப்போதுமே பரபரப்பைக் கிளப்பிய பழக்கப்பட்டு விட்டு இயக்குநர் ராம் கோபால் வர்மா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகர் ரஜினிகாந்தை கடத்த வீரப்பன் திட்டம் தீட்டியிருந்ததாக கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் ''ராஜ்குமார் போல ரஜினிகாந்தை வீரப்பன் கடத்தி வைத்து மிரட்ட ரகசிய திட்டம் தீட்டியிருந்தார். இந்தப் படத்திற்காக அவருடன் நெருக்கமாக இருந்தவர்கள் மற்றும் அவரைச் சேர்ந்தவர்கள் பலரிடம் பேசியபோது இதைக் கூறினார்கள்'' என்று கூறியுள்ளார்.
2004
ராம் கோபால் வர்மா கூறியுள்ளது உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் இந்தத் தகவல் ரஜினி ரசிகர்களிடையே பரபரப்பை கிளப்பியுள்ளது. ஒரு வேளை கில்லிங் வீரப்பன் படத்திற்கு தமிழகத்தில் கூட்டம் சேர்க்க இவ்வாறு கதையைக் கிளப்பியுள்ளாரா ராம்கோபால் வர்மா என்ற சந்தேகமும் எழுகிறது.