Don't Miss!
- Technology ஏர்டெல் காலி.. மாதாந்திரம் ரூ.141 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. 5ஜி டேட்டா.. அன்லிமிட் வாய்ஸ் கால்கள்!
- News "வேட்புமனு தாக்கல் போதே குழப்பம் இருந்தது.." வெடித்த சர்ச்சைக்கு.. அண்ணாமலை தந்த பரபர விளக்கம்!
- Sports எழுதி வச்சிக்கோங்க! ஆளே மாறிட்டான்..நிச்சயம் பெரிய ஆளா வருவான்.. 22 வயது வீரரை பாராட்டிய சூர்யகுமார்
- Lifestyle இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- Finance ஐஐஎம் பெங்களூரு: 516 பேருக்கு வேலை, சாராசரி சம்பளமே ரூ.32.5 லட்சமாம்..!
- Automobiles இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
நெஞ்சுவலி... இந்தி நடிகர் சசிகபூர் மும்பை மருத்துவமனையில் அனுமதி
மும்பை: நெஞ்சு வலி காரணமாக பிரபல இந்தி நடிகர் சசிகபூர் நேற்று மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
கடந்த 1960 - 70 ஆண்டு வாக்கில் இந்தி சினிமாவில் கொடி கட்டிப் பறந்தவர் நடிகர் சசிகபூர். பிரபல கவுர் குடும்பத்தைச் சேர்ந்த சசிகபூர், தனது சிறு வயதிலேயே நடிக்கத் தொடங்கி விட்டார்.
நடிகராக மட்டுமின்றி பட இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வந்தவர் சசிகபூர்.
116 திரைப்படங்கள்....
இதுவரை சசிகபூர் சுமார் 116 இந்திப் படங்களில் நடித்துள்ளார். அதில் 61 படங்கள் தனி கதாநாயகனாகவும், 55 படங்களில் பல கதாநாயகர்களுடன் நடித்து உள்ளார்.
3 தேசிய விருதுகள்...
21 படங்களில் துணை நடிகர் மற்றும் சிறப்பு தோற்றங்களில் நடித்து உள்ள சசிகபூர், 3 முறை தேசிய விருதுகள் வாங்கி உள்ளார், பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது மற்றும் பத்மபூஷன் விருது உள்பட பல விருதுகளை பெற்று உள்ளார்.
நெஞ்சுவலி...
தற்போது 76 வயதாகும் சசிகபூருக்கு நேற்று திடீரென கடுமையான இருமலும், அதனைத் தொடர்ந்து மூச்சு விடுவதில் சிரமமும் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து சசிகபூருக்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டதால், மேற்கு அந்தேரி புறநகரில் உள்ள கோகிலபம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவசரச் சிகிச்சைப் பிரிவு...
தற்போது மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டு உள்ளார் சசிகபூர். அங்கு அவரது உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
குடும்பம்...
சசிகபூருக்கு குணால் கபூர், கரண் கபூர் என இரு மகன்களும், சஞ்சனா கபூர் என்ற மகளும் உள்ளனர்.இவரது மனைவி ஜெனிபர் கெண்டால் 1984 ஆம் ஆண்டு கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.