Don't Miss!
- Sports ரியான் பராக் இல்லடா.. இது பேட்ட பராக்.. கடைசி 5 ஓவரில் 77 ரன்கள்.. டெல்லிக்கு ஷாக் கொடுத்த ராஜஸ்தான்
- Automobiles எவ்வளவு பெரிய கிரிக்கெட்டர், குழந்தை போல் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ரைடு!! ஓட்டி பார்த்த பின் அவர் சொன்னது...
- News பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் முதல் அரெஸ்ட்.. முஸம்மில் ஷரீப் என்பவரை கைது செய்த என்ஏஐ
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
மூத்த ஒளிப்பதிவாளர், இயக்குநர் என்கே விஸ்வநாதன் மரணம்!
சென்னை: மூத்த ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான என் கே விஸ்வநாதன் நேற்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75.
1970-களில் ஒளிப்பதிவாளராக அறிமுகமான என்.கே.விஸ்வநாதன், கமல் நடித்த சட்டம் என் கையில், கடல் மீன்கள், கல்யாணராமன், மீண்டும் கோகிலா படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார்.
மறைந்த இயக்குநர் இராம நாராயணனின் ஆஸ்தான ஒளிப்பதிவாளராகத் திகழ்ந்தார் என்கே விஸ்வநாதன்.
நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த என்கே விஸ்வநாதன், 1990ல் இயக்குநராக அவதாரமெடுத்தார்.
பாண்டி நாட்டுத் தங்கம், எங்க ஊரு காவக்காரன், இணைந்த கைகள், நாடோடி பாட்டுக்காரன், பெரிய வீட்டு பண்ணக்காரன், பெரிய மருது, புதுப்பட்டி பொன்னுத்தாயி, ஜெகன் மோகினி உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார்.
நேற்று மாலை சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் என்.கே.விஸ்வநாதன் மாரடைப்பால் காலமானார்.
அவரது மனைவி ஜெயந்தி ஏற்கெனவே காலமாகிவிட்டார். அவருக்கு ராஜேஸ்வரி என்ற மகள் இருக்கிறார்.
மறைந்த என்கேவிக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.