twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிரபல மலையாள நகைச்சுவை நடிகர் மாலா அரவிந்தன் மரணம்

    By Shankar
    |

    கேரள சினிமாவில் பழம்பெரும் நகைச்சுவை நடிகர் மாலா அரவிந்தன் இன்று காலை மரணமடைந்தார். அவருக்கு வயது 72.

    கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் மாலா கிராமத்தைச் சேர்ந்த இவர் பத்திரப்பட்டு என்ற படத்தின் மூலம் மலையாளத்தில் நடிக்க ஆரம்பித்தார்.

    Veteran Malayalam actor Mala Aravindan passes away

    தொடர்ந்து சமயமில்லாம் போலும், கண்ணக்குள், அங்குரி, ஆவேசம் உள்ளிட்ட படங்களில் காமெடி நடிகராக நடித்து கேரள மக்களின் மனதில் இடம் பிடித்தார். கடந்த ஆண்டு மசாலா ரிப்பப்ளிக் என்ற படத்தில் நடித்தார். இதுதான் அவரது கடைசி படம். மொத்தம் 400க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ளார்.

    கேரள சினிமா உலகில் தனக்கென தனி இடத்தை உருவாக்கி வைத்திருந்தவர் அரவிந்தன்.

    கடந்த சில ஆண்டுகளாக இருதய நோயால் பாதிக்கப்பட்டு இருந்த அரவிந்தன் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்திருந்தார். கடந்த 19-ந்தேதி மீண்டும் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

    உடனே கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளித்து அவரது உயிரை காப்பாற்ற டாக்டர்கள் முயற்சித்தனர்.

    ஆனால் மாலா அரவிந்தனுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இன்று காலை (புதன்கிழமை) மாலா அரவிந்தன் மரணமடைந்தார்.

    கோவையிலிருந்து மாலா அரவிந்தனின் உடல் கேரளாவுக்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்து செல்லப்பட்டது. அவரது சொந்த ஊரில் இறுதி சடங்கு நடைபெறுகிறது.

    அரவிந்தனருக்கு இவருக்கு கீதா என்ற மனைவியும். முத்து என்ற மகனும், கலா என்ற மகளும் உள்ளனர்.

    English summary
    Mala Aravindan, Malayalam film industry's popular comedian, who acted in close to 400 films in the last 37 years passed away. He was 76.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X