Don't Miss!
- Automobiles சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ரஜினி, கமல் படங்களின் புகைப்படக் கலைஞர் நேஷனல் செல்லையா மறைவு!
பிரபல சினிமா போட்டோகிராபர் கலைமாமணி நேஷனல் செல்லையா நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 80.
எம் ஜி ஆர், சிவாஜி ஜெமினி, ஜெய்சங்கர், ரஜினி, கமல் முதல் இளைய தலைமுறை நடிகர்கள் வரை இவர் கேமராவில் சிக்காதவர்களே இல்லை.
சுமார் 1200 திரைப்படங்களில் பணியாற்றிய இவர் கடைசியாக பணியாற்றிய படம் 'பாட்ஷா'. அந்தப் படத்தில் ஒரு காட்சியிலும் (நீ நடந்தால் நடையழகு பாடலில், கான்ஸ்டபிள் வேடம்) நடிக்க வைத்திருந்தார் ரஜினி.
நேஷனல் செல்லையா காரைக்குடியைச் சேர்ந்தவர். 1950-ல் ஏவிஎம்மில் உதவி புகைப்படக் கலைஞராக பணியைத் தொடங்கினார். இவர் முதல் முறையாக நிழற்படக் கலைஞராகப் பணியாற்றிய படம் மிஸ்ஸியம்மா. தொடர்ந்து ஏவிஎம் படங்கள், எஸ் பி முத்துராமன், கே பாலச்சந்தர், ராம நாராயணன், விசு, துரை போன்றவர்களின் படங்களில் ஆஸ்தான ஸ்டில் போட்டோகிராபராகப் பணியாற்றினார்.
குறிப்பாக பாட்ஷா வரை ரஜினியின் பல படங்களுக்கு இவர்தான் புகைப்படக் கலைஞர்.
உடல் நலக்குறைவால் நேற்று இரவு மரணமடந்தார். அவரது இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடக்கிறது.