Don't Miss!
- Technology iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- News "டெல்லியில் ஜனாதிபதி ஆட்சி?" கவர்னர் சொன்ன அந்த ஒரு வார்த்தை! ஆம் ஆத்மி பதிலடி.. சட்டம் சொல்வது என்ன
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
"விசாரணை"யில் தனுஷ் நடித்திருந்தால் படம் "பப்பரப்பா"வாகியிருக்கும்... வெற்றிமாறன்
சென்னை: ஒரு பெரிய நடிகர் விசாரணையில் நடித்திருந்தால் வெற்றி இந்த அளவிற்கு சாத்தியமில்லை என்பதாலேயே தனுஷை இப்படத்தில் நடிக்க வைக்கவில்லை என்று இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
விசாரணை படத்தின் தணிக்கை செய்யப்படாத திரையிடல் சென்னையில் நடந்தது. அதன் பின்னர் பேசிய அவர், " இப்படத்தில் தனுஷ் நடித்திருந்தால் நன்றாக தான் இருந்திருக்கும். ஆனால், அவர் நடித்திருந்தால் கண்டிப்பாக தோல்வி படமாக மாறியிருக்கும்.
தனுஷ் ஒரு பெரிய நடிகர். அவருக்கென்று பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அந்த மாதிரி ஒரு பெரிய நடிகர் "விசாரணை" படத்தில் நடித்திருந்தால் இந்தளவிற்கு வரவேற்பு பெற்றிருக்காது.
அந்த ரசிகர்கள் எல்லாம் படம் பார்த்துவிட்டு என் மீது கோபமாகி இருப்பார்கள். ஆடுகளம் படமே இப்போது வெளியாகி இருந்தால் அவருடைய ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பது எனக்கு தெரியவில்லை.
பார்த்தவர்கள் அனைவருமே நன்றாக இருக்கின்றது என்றார்கள். ஒரு விவாதத்தை ஏற்படுத்தினார்கள். வெகுஜன மக்கள் போய் பார்க்கக்கூடிய படம் அல்ல விசாரணை. ஆனால் இந்த வரவேற்பிற்கே எனக்கு சந்தோஷம் தான்" என்று தெரிவித்துள்ளார்.