Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
பலே வெள்ளையத்தேவா... சசிகுமாருக்கு சங்கிலி முருகன் பாராட்டு - வீடியோ
சென்னை: புதுமுக இயக்குநர் சோலை பிரகாஷ் இயக்கத்தில் சசிகுமார், தான்யா, கோவை சரளா, சங்கிலி முருகன், ரோகினி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பலே வெள்ளையத் தேவா'. தர்புகா சிவா இசையமைத்துள்ள இந்தப் படத்தை சசிகுமார் தயாரித்துள்ளார்.
ஒரே கட்டமாக தேனியில் மொத்த படப்பிடிப்பையும் படக்குழு முடித்துள்ளது. டிசம்பர் 23-ம் தேதி வெளியீட்டுக்காக, இறுதிகட்ட பணிகளைத் துரிதப்படுத்தி வந்த படக்குழு அப்பணிகள் முடிந்தவுடன், தணிக்கைக்கு விண்ணப்பித்தது.
தணிக்கை அதிகாரிகள் எந்தொரு இடத்தையும் கட் செய்யச் சொல்லாமல் 'யு' சான்றிதழ் கொடுத்துள்ளார்கள். தணிக்கை பணிகள் முடிந்துள்ளதைத் தொடர்ந்து டிசம்பர் 23ஆம் தேதி வெளியீடு என்று அதிகாரபூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.
இதுதொடர்பான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் சசிகுமார், நடிகை தன்யா, கோவை சரளா, ரோகினி, சங்கிலி முருகன், இயக்குநர் சோலை பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டர். அப்போது நடிகர் சங்கிலி முருகன் பலே சசிகுமார் என புகழாரம் சூட்டினார்.