Don't Miss!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
3 ஆண்டுக்குள் நடிகர் சங்க கட்டிடம்... அதன்பிறகே டும்டும்டும்... விஷால் உறுதி- வீடியோ
சென்னை: நடிகர் சங்கத்தின் பொதுக் குழு கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை தி. நகரில் உள்ள சங்க மைதானத்தில் தலைவர் நாசர் தலைமையில் நடைபெற்றது. கூட்டம் நடந்த இடத்தில் தள்ளுமுள்ளு, தடியடி, கைது என்று பல பிரச்சனைகள் நடந்தபோதும், கூட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார் விஷால். அப்போது அவர், "3 ஆண்டுக்குள் நடிகர் சங்க கட்டிடம் கட்டப்படும். அதன் பிறகே திருமணம் செய்து கொள்வேன். நடிகர் சங்க கட்டிடத்தில் தான் என் திருமணம் நடைபெறும்" என்றார். மேலும், இந்த பொதுக்குழுக் கூட்டத்திற்கு ரஜினி, அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் வராதது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், "பொதுக்குழுவுக்கு வரக்ககூடாது என்று எந்த உறுப்பினரையும் தடுக்கவில்லை. பொதுக்குழுவுக்கு எல்லா நடிகர்களுக்கும் அழைப்பு அனுப்பி இருந்தோம். அவரவர் சூழ்நிலைக்கு ஏற்ப படப்பிடிப்பு காரணமாக சிலரால் பங்கேற்க இயலவில்லை" என பதிலளித்தார்.