Don't Miss!
- Automobiles சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
துப்பாக்கியா? போக்கிரியா? குழம்பித் தவிக்கும் விஜய் ரசிகர்கள்!
சென்னை: விஜய் பிறந்தநாளுக்கு எந்தப் படத்தைத் திரையிடுவது என்று விஜய் ரசிகர்கள் குழம்பித் தவித்து வருகின்றனர்.
நாளைய தினம் விஜய் தன்னுடைய 42 வது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கிறார். இதனையொட்டி அவரது ரசிகர்கள் அன்னதானம், ரத்த தானம் போன்ற நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளனர்.
இதுதவிர சமூக வலைதளங்களில் காமன் டிபி, கட்-அவுட்கள் என அமர்க்களப்படுத்தி வருகின்றனர். மேலும் நாளை விஜய் நடித்த படங்களின் சிறப்புக் காட்சிகளைத் திரையிடவும் ஏற்பாடு செய்துள்ளனர்.
கோவில்பட்டி பகுதியில் ஜில்லா, குழித்துறையில் துப்பாக்கி என்று வெளியூர் ரசிகர்கள் முடிவு செய்து கொண்டாட்டத்திற்கு தயாராகி விட்டனர்.
ஆனால் சென்னையில் உள்ள ரசிகர்கள் எந்தப் படத்திற்கு சிறப்புக் காட்சி ஏற்பாடு செய்யலாம் என குழப்பத்தில் ஆழ்ந்திருப்பதாக கூறப்படுகிறது.
சென்னை ரசிகர்களைப் பொறுத்தவரை துப்பாக்கி, போக்கிரி 2 படங்களுமே விருப்ப லிஸ்டில் இருக்கின்றன. எனினும் இரண்டில் ஒரு படத்தைத் தான் தேர்வு செய்யமுடியும் என்பதால் எந்தப் படத்தை திரையிடலாம் என்று சமூக வலைதளங்களில் வாக்கெடுப்பு நடத்தி வருகின்றனர்.
வாக்கெடுப்பில் போக்கிரியே முன்னிலை வகிப்பதால் நாளை 6.30 மணிக்கு வெற்றி திரையரங்கில் ஏற்பாடு செய்திருக்கும் சிறப்புக் காட்சியில், போக்கிரி திரையிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல தமிழ்நாடு முழுவதும் சிறப்புக் காட்சிகளுக்கு விஜய் ரசிகர்கள் ஏற்பாடு செய்திருப்பதாக கூறப்படுகிறது.