Don't Miss!
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Automobiles தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
- Technology உங்க மொபைலில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் செயலிகள் இருக்கா? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?
- News சொத்துக்குவிப்பு வழக்கு இன்று விசாரணை.. அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கோர்ட்டில் ஆஜர்!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
'விஜய்யோட போட்டோ எடுக்கணுமா... ரூ 2 ஆயிரம் கொடுங்க..' - இப்படி ஒரு வசூல் வேட்டை!!
'விஜய் வருகிறார்... அவருடன் போட்டோ எடுத்துக்க ரூ 2000 கொடுங்க' என கூவிக் கூவி வசூல் செய்த கும்பலைத் தேடி வருகின்றனர் ரசிகர் மன்ற நிர்வாகிகள்.
இதுகுறித்து சேலம் மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட தலைவர் தமிழன் ஆ.பார்த்தீபன் வெளியிட்டுள்ள அறிக்கை:
போட்ட எடுக்க டேட்
நடிகர் விஜய் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று தன்னுடன் போட்டோ எடுப்பதற்கான தேதியை அறிவித்துள்ளார். ஆனால் தற்போது படங்களில் பிசியாக நடித்து வருவதால் சேலம் மாவட்டத்திற்கான தேதியை இன்னும் அவர் அறிவிக்கவில்லை.
வசூல் வேட்டையில் சிலர்
இதைப் பயன்படுத்தி சேலம் மாவட்டத்தில் பனமரத்துப்பட்டி, கொண்டலாம்பட்டி, மல்லூர் ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் ரசிகர்களை நேரில் அழைத்துச் சென்று நடிகர் விஜயுடன் போட்டோ எடுத்து தருவதாக கூறி ரூ.1000, ரூ.2000 ஆயிரம் என வசூல் வேட்டையில் சிலர் ஈடுபட்டு வருவதாக மாவட்ட தலைவருக்கு புகார்கள் வந்துள்ளன.
பிடித்து ஒப்படையுங்கள்
ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடம் மோசடி கும்பல் போனில் பேசினாலோ அல்லது நேரில் வந்து பணம் வசூல் செய்தாலோ மாவட்ட தலைமை அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்தில் அந்த மோசடி கும்பலை பிடித்து ஒப்படைக்க வேண்டும்.
தேதி அறிவித்த பிறகு சொல்கிறோம்
சேலம் மாவட்ட ரசிகர்களுக்கு தேதி அறிவித்த பிறகு மாவட்ட தலைமை மூலம் அனைவருக்கும் தகவல் கொடுக்கப்படும்," என்று தெரிவித்துள்ளார்.