Don't Miss!
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- News இது என்ன ஜனநாயகம்.. தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் நிதி முடக்கப்படுகிறது.. தலைவர்கள் குமுறல்
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Sports 8 வருஷமாக ஆர்சிபிக்கு தொடரும் சோகம்.. கேகேஆர் செய்த மாஸ் சம்பவம்.. வரலாற்றை மாற்றுவாரா விராட் கோலி?
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
முதல் முறையாக புலியில் தற்காப்புக் கலை வீரராக விஜய்
புலி படத்தில் தற்காப்புக் கலை வீரராக வருகிறார் நடிகர் விஜய். அவர் இப்படியொரு வேடத்தில் நடிப்பது இதுதான் முதல் முறை என்கிறது புலி குழு.
சிம்புதேவனின் ஃபான்டசி எனும் அதிஉச்ச கற்பனைக் கதைதான் இந்த புலி. சரித்திர, புராண காலகட்டங்களைத் தாண்டிய ஒரு களத்தில் நடக்கும் கதை இது.
இந்தப் படத்தில் விஜய்க்கு இந்த வேடம், அந்த வேடம் என ஏகப்பட்ட கதைகள்.
தற்காப்புக் கலை வீரர்
ஆனால் படத்தின் முக்கிய பகுதி ஒன்றில் அவர் தற்காப்புக் கலை வீரராக வருகிறார். மிக ஆக்ரோஷமான சண்டைக் காட்சியில் அவர் நடிக்கிறார். இதற்காக அவருக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
தாய்லாந்திலிருந்து
தாய்லாந்தைச் சேர்ந்த தற்காப்புக் கலை நிபுணர் யோங் தலைமையில் சிலர் இதற்காக வரவழைக்கப்பட்டுள்ளனர்.
கிராஃபிக்ஸ்
படத்தில் ஏராளமான கிராஃபிக்ஸுக்குகதான் வேலை அதிகம் என்கிறார்கள். இந்த விஷயத்தில் கால தாமதம் ஆகக் கூடாது என்பதால் ஏகப்பட்ட நிபுணர்களை வைத்து செய்து கொண்டிருக்கிறார்களாம்.
ஜூனில்
படத்தை விஜய் பிறந்த நாளான ஜூன் 22-ம் தேதி வெளியிட வேண்டும் எனத் திட்டமிட்டுள்ளனர். மே மாதம் படத்தின் இசை வெளியாகும் எனத் தெரிகிறது.