Don't Miss!
- News வாய்ப்பு மறுத்த பாஜக.. தொகுதி மக்களுக்கு 'வருண் காந்தி' உணர்ச்சி பொங்க கடிதம்! உ.பியில் சலசலப்பு
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
கத்தி படத்தில் நடிக்க வேண்டாம்... சிரஞ்சீவிக்கு கோரிக்கை விடுத்த தஞ்சை மக்கள்
சென்னை: கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க வேண்டாம் என்று தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவிக்கு தஞ்சை சுற்றுவட்டார கிராம மக்கள் கடிதங்கள் மூலம் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
தஞ்சை மாவட்டம் இளங்காடு கிராமத்தில் வசிக்கும் அன்பு ராஜசேகர் தான் இயக்கிய 'தாகபூமி' குறும்படத்தை தழுவி இயக்குநர் முருகதாஸ் கத்தி திரைப்படத்தை எடுத்திருப்பதாக தஞ்சை நீதிமன்றத்தில் வழக்கொன்றை சமீபத்தில் தொடர்ந்தார்.
கத்தி திரைப்படத்தின் இயக்குநர் முருகதாஸ், தயாரிப்பாளர்கள் கருணாகரன், சுபாஷ்கரன், ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் மற்றும் நடிகர் விஜய் உள்ளிட்டோர் மீது தஞ்சை நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.
மேலும், கத்தி படத்தை வேறு மொழியில் ரீமேக் செய்வதற்கு தடை கேட்டும் நீதி மன்றத்தில் 4 வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் சிரஞ்சீவி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இதனைக் கேள்விப்பட்ட தஞ்சை இளங்காடு மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நீங்கள் நடிக்க வேண்டாம் என்று தொடர்ந்து அவருக்கு கடிதங்களை அனுப்பி வருகின்றனர்.
மேலும் இயக்குநர் முருகதாஸுக்கு எதிராக தஞ்சை மாவட்டம் முழுவதும் ‘கையெழுத்து இயக்கம்' தொடங்க உள்ளதாகவும் இளங்காடு கிராம மக்கள் தெரிவித்துள்ளனர
புலி படத்தின் வெளியீட்டிற்கு முதல்நாள் கத்தி விவகாரம் பூதாகரமாக உருவெடுத்தது குறிப்பிடத்தக்கது.