Don't Miss!
- News கூட்டமே இல்லை.. இங்கே என்ன பண்றது? சிரிப்பை மறந்த "சித்தி".. பாதியில் சென்னைக்கே புறப்பட்ட ராதிகா
- Technology அசரவைக்கும் ஏர்டெல்.. கம்மி பட்ஜெட்ல தினமும் 3ஜிபி டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்.. எந்த திட்டம்?
- Lifestyle புதன் பெயர்ச்சியால் உருவான கேந்திர திரிகோண ராஜயோகம்: ஏப்ரல் 09 வரை இந்த 3 ராசிக்கு பண மழை பொழியப் போகுது..
- Finance என்னது பாம்பு விஷம் மருந்தா..? சீனாவில் விநோத பார்மா துறை உருவானது எப்படி..?
- Sports SRH vs MI : கேப்டனாக ஹர்திக் பாண்டிய சறுக்கியது இங்கே தான்.. ரோகித் சர்மா அருமை இப்போ புரியுதா!
- Automobiles எந்தவொரு பந்தாவும் இல்ல... பிரபல சீரியல் நடிகையின் புதிய கார்!! சிம்பிளா வந்து டெலிவிரி எடுத்துனு போய்ட்டாரு!
- Education ஜேஇஇ பிரதானத் தேர்வெழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
விஜய்யின் புலி... ஆகஸ்டில் ஆடியோ... செப்டம்பரில் ரிலீஸ்!
ஏக எதிர்ப்பார்ப்புக்கிடையே விஜய் நடித்துள்ள புலி படத்தின் இசை வெளியீடு வரும் ஆகஸ்ட் மாதத்தில் நடக்கும் என்றும், படத்தை செப்டம்பரில் விஜயதசமி ஸ்பெஷலாக வெளியிடப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
புலி படத்தின் டப்பிங், ரீரிக்கார்டிங், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன.
இதில் நாயகிகளாக சுருதிஹாசன், ஹன்சிகா நடித்துள்ளனர். முன்னாள் கதாநாயகி ஸ்ரீதேவியும் ராணி கேரக்டரில் வருகிறார். சிம்புதேவன் இயக்கியுள்ளார்.
45 லட்சம் பேர்
இதன் டிரெய்லர் சமீபத்தில் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. 45 லட்சம் பேர் இதுவரை ட்ரைலர் பார்த்துள்ளனர். 10 ஆயிரம் பேருக்கு இது பிடிக்கவில்லையாம்.
இசை எப்போ?
தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் பாடல்கள் வெளியீடு எப்போது என ஆவலுடன் காத்திருக்கின்றனர் விஜய் ரசிகர்கள். விஜய் பிறந்த நாளன்றுதான் இசை வெளியிட முதலில் உத்தேசித்திருந்தனர். இப்போது ஆகஸ்டில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.
படம்
படத்தை செப்டம்பர் மாதம் விஜயதசமிக்கு வெளியிடுவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தனர். தீபாவளிக்கு நிறைய பெரிய படங்கள் வரவிருப்பதால் இப்படி முடிவெடுத்துள்ளார்களாம்.
விஜய்க்கு இது முதல் பரிசோதனை
விஜய்யைப் பொருத்தவரை இந்தப் படம் ஒரு சோதனை முயற்சி. காரணம் அவர் நடித்துள்ள முதல் சரித்திரப் பின்னணி கொண்ட கற்பனைக் கதை இது.