Don't Miss!
- News ஒரு ஓட்டுக்காக போராடிய "சர்க்கார்" விஜய் நிலையா இது.. கட்சி தலைவரான முதல் தேர்தலிலேயே ஏமாற்றம்
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கிளாடியேட்டர் மாதிரி ஆக்ஷன் அட்வென்ச்சர் படம் புலி! - தயாரிப்பாளர்
ஹாலிவுட் படமான கிளாடியேட்டர் போல ஆக்ஷன் அட்வென்ச்சர் படமாக உருவாகியுள்ளது விஜய்யின் புலி என்கிறார் அதன் தயாரிப்பாளர்கள் ஷிபு தமீம் மற்றும் பிடி செல்வகுமார்.
விஜய்யின் புலி ஒரு அதியுச்ச கற்பனைப் படம் (பேன்டஸி) என்று கூறப்பட்டு வந்தது. அந்த அதியுச்ச கற்பனை எப்படி இருக்கும் என படத்தின் தயாரிப்பாளர்கள் பிடி செல்வகுமார் மற்றும் ஷிபு தமீம் ஒரு அறிக்கை மூலம் கூறியுள்ளனர்.
அந்த அறிக்கை:
ரஸ்ஸல் குரோவ் நடித்த தி கிளேடியேட்டர் ஹாலிவுட் திரைப்படத்தைப் போன்ற ஆக்சன் அட்வென்ச்சர் படமாக புலி இருக்கும்.
விஜய்யின் கேரியரில் இந்தப் படம் முக்கியமானதாக அமையும்.
தென்னிந்திய மக்கள் ஒவ்வொருவரும் ஸ்ரீதேவி தமிழில் மீண்டும் நடிக்க வேண்டும் என விரும்புகிறார்கள். அவர் உண்மையில் இங்கு பிரபலமிக்கவர். அவரை நடிக்க வைக்க பல தயாரிப்பாளர்கள் அணுகியிருப்பர். ஆனால், புலி படத்தின் திரைக்கதையினை கேட்டு அதில் நடிக்க அவர் ஒப்பு கொண்டது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
அதிக பலம் மற்றும் அதிகாரங்கள் கொண்ட ஒரு குழுவின் தலைவியாக ஸ்ரீதேவி இதில் நடிக்கிறார்," என்று தெரிவித்துள்ளனர்.