Don't Miss!
- Automobiles சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பட வாய்ப்புக்காக பாலியல் தொல்லையை சந்தித்த நடிகைகள்: விஜய் சேதுபதி என்ன சொல்கிறார்?
சென்னை: பெண்களுக்கு பாலியல் தொல்லை அளிக்கும் ஆண்களை பார்த்தாலே அருவருப்பாக உள்ளது என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
திரைத்துறையில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது குறித்து நடிகைகள் தானாக முன்வந்து பேசத் துவங்கியுள்ளனர். தற்போது தான் ஒவ்வொரு நடிகையாக தங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றி துணிந்து பேசுகிறார்கள்.
இந்நிலையில் பாலியல் தொல்லைகள் குறித்து நடிகர் விஜய் சேதுபதி கூறியிருப்பதாவது,
நடிகைகள்
பாலியல் தொல்லைகள் குறித்து நடிகைகள் பேசியுள்ளனர். அது அவர்களின் சொந்த கருத்து. எங்கு சென்றாலும் பெண்கள் பாலியல் தொல்லைகளை சந்திக்கிறார்கள்.
சிறுமிகள்
பெண்கள் மட்டும் அல்ல சிறுமிகள் கூட பாலியல் தொல்லைக்கு ஆளாகிறார்கள். அம்மா என்கிற பெண் இல்லை என்றால் நாம் பிறந்திருக்க முடியுமா?
பெண்கள்
பெண்கள் முக்கியமானவர்கள் என்பதை உணர்ந்து ஆண்கள் அவர்களை மதிக்க வேண்டும். எதையும் கட்டாயப்படுத்தி செய்ய வைக்க முடியாது. அவர்களாக புரிந்து கொள்ள வேண்டும்.
அருவருப்பு
பெண்களுக்கு பாலியல் தொல்லை அளிக்க வேண்டும் என்று நினைக்கும் ஆண்களை பார்த்தால் அருவருப்பாக உள்ளது என்று விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.