Don't Miss!
- News உயிரை கையில புடிச்சுகிட்டு போகவேண்டி இருக்கே! கிளாம்பாக்கம் வாசலில் நடக்கும் திக்.. உடனே கவனிக்கணும்
- Automobiles ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த 5 விஷயங்களை உங்க மனைவியிடம் நீங்க சொன்னா உங்களால் நிம்மதியாவே வாழ முடியாதாம்...!
- Sports IPL 2024 : ஒரு சம்பவம்.. 3 அணிகளின் சோலியும் முடிஞ்ச்.. அம்பானியை கிண்டல் செய்யும் சிஎஸ்கே ஃபேன்ஸ்!
- Technology வாங்குனா நீதான்.. இயர்பட்ல டால்பி அட்மோஸ்.. ஹெட் டிராக்கிங்.. வயர்லெஸ் சார்ஜிங்.. எந்த மாடல்?
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
ஹீரோவான பஞ்சாயத்துத் தலைவர்.. விருத்தாச்சலத்தின் விசேஷ அம்சங்கள்
சென்னை: விருத்தாச்சலம் படத்தில் ஹீரோவாக நடிப்பவர் கச்சிராயநத்தம் என்ற கிராமத்தின் முன்னாள் பஞ்சாயத்துத் தலைவராம், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் கையால் விருது வாங்கியவராம்.
லட்சுமி அம்மாள் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக பி.செந்தில்முருகன் தயாரிக்கும் படம்தான் விருத்தாசலம்.
விருதகிரி என்பவர் இதில் நாயகனாக அறிமுகமாகிறார். சினிமாவுக்குத்தான் இவர் புதுசு. ஆனால் கடலூர் மாவட்டம விருத்தாசத்தில் இவர் பிரபலமானவராம்.
பஞ்சாயத்துத் தலைவர்
கச்சிராயநத்தம் என்ற கிராமத்தின் தலைவராக இருந்த போது அவரது சிறந்த நிர்வாகத்திற்காக ஜனாதிபதி பிரதீபா பாட்டிலிடம் விருது பெற்றவர் விருதகிரி.
3 நாயகிகள்
படத்தில் நாயகிக்கே வெயிட் அதிகம். அதுவும் 3 நாயகிகளைப் போட்டுள்ளனர். ஸ்வேதா, சமீரா, ஷெரீன் தாஹா என பேர் நாயகிகளா கரம் கோர்த்து கலக்கியுள்ளனர்.
குடிகாரனின் கதை
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - ரத்தன்கணபதி. படத்தின் கதை பற்றி இயக்குனரிடம் கேட்டோம்... கிராமத்தில் குடித்துவிட்டு தன் போக்கில் சுற்றி திரிகிறார் விருதகிரி.
புரட்டிப் போடும் பெண்
தனது வாழ்கையில் எதையோ இழந்து விட்டு எதையோ தேடுவது மாதிரியான வாழ்க்கை. அப்படிப்பட்டவரின் நிகழ்கால வாழ்க்கையை ஒரு பெண் எப்படி புரட்டி போடுகிறாள் என்பது கதை முடிச்சு.
பருத்தி வீரன் மாதிரி
என் ராசாவின் மனசிலே, பருத்திவீரன் மாதிரியான கிராமத்து யதார்த்த மனிதர்களை இதில் பிரதிபலித்திருக்கிறோம். இந்த கதாப்பாத்திரத்திற்கு விருதகிரி நூறு சதவீதம் பொருந்தி போய் விட்டார்.
ஓடி வந்து உதவி செய்பவர்
நிஜ வாழ்வில் விருதகிரி சமூக சேவையில் ஆர்வம் உள்ளவர். அவர் இருக்கும் வித்தாசலம் பகுதியில் உள்ள கச்சிராய நத்தம் என்ற ஊரில் யாருக்காவது மருத்துவ உதவி தேவைபட்டால் அவர்களை தனது சொந்த காரில் அழைத்து வந்து சென்னையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்வார்.
உயிர் காப்பாளனாக
உயிருக்கு போராடிய எத்தனையோ பேரை காப்பாற்றி உள்ளார்.தனது சொந்த வேலைகளைக் கூட பெரிதாக நினைக்காமல் மற்றவர்களின் உயிர் காப்பாளனாக சேவை செய்கிறார்.
யூனிட்டுக்கே பெருமை
வாழுகிற வரைக்கும் நம்மால் முடிந்தவரை மற்றவர்களை வாழ வைத்து பார்ப்போமே என்று சொல்கிறார். அவரது பெருந்தன்மை என்னை மட்டுமல்ல எங்கள் யூனிட்டையே பெருமைப்படுத்தி விட்டது என்கிறார் இயக்குனர் ரத்தன் கணபதி.
-
விஜய் ஒரு அமைதிப்புயல்.. பகவதி படத்துல இருந்தே.. ’கில்லி அப்பா’ ஆஷிஷ் வித்யார்த்தி பேட்டி!
-
Aavesham movie: 5 நாட்களில் அரைசதம்.. 50 கோடி வசூல்.. பட்டையை கிளப்பும் ஃபகத் பாசிலின் ஆவேஷம்!
-
தலைவர் 172ஐயும் தயாரிக்கிறதா அந்த நிறுவனம்?.. இயக்குநர் யார் தெரியுமா? படத்தின் டைட்டிலும் ரெடியாம்