Don't Miss!
- News பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் முதல் அரெஸ்ட்.. முஸம்மில் ஷரீப் என்பவரை கைது செய்த என்ஏஐ
- Sports RR vs DC : 36-3.. திடீரென உள்ளே புகுந்த அஸ்வின்.. அடுத்தடுத்து பறந்த சிக்சர்கள்.. தப்பிய ராஜஸ்தான்!
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
தீபாவளி ரேஸில் குதித்தது விஷாலின் பாண்டிய நாடு!
ஏற்கெனவே மூன்று படங்கள் தீபாவளிக்கு வரிசை கட்டி நின்றபடி 900 தியேட்டர்களைக் கேட்டுக் கொண்டிருக்க, அடுத்ததாக களமிறங்கியிருக்கிறது விஷாலின் பாண்டிய நாடு.
விஷால் பிலிம் பேக்டரி சார்பில் தயாராகும் முதல் படம் இது. சுசீந்திரன் இயக்க, டி இமான் இசையமைத்துள்ளார்.
முதல் முறையாக விஷாலும் லட்சுமி மேனனும் ஜோடி சேர்ந்துள்ளனர்.
இந்தப் படத்தை தீபாவளி ஸ்பெஷலாக களமிறக்க முடிவு செய்துள்ளார் தயாரிப்பாளர் விஷால்.
மதகஜராஜா திட்டமிட்டபடி வெளியாகியிருந்தால், இந்தப் படத்தை ஒரு மாதம் தள்ளி வெளியிடவிருந்தார் விஷால். ஆனால் மதகஜராஜாவுக்கு சிக்கல் இன்னும் தீராததால், தீபாவளிக்கு பாண்டிய நாடு படத்தை வெளியிடலாம் என களமிறங்கியுள்ளார்.
ஏற்கெனவே ஆரம்பம், ஆல் இன் ஆல் அழகுராஜா மற்றும் இரண்டாம் உலகம் ஆகிய படங்கள் தீபாவளிக்கு வெளியாவதாக அறிவித்துள்ளன. இந்தப் படங்களுக்கு 900 தியேட்டர்கள் தேவைப்படுகின்றன. ஆனால் 700 அரங்குகள்தான் கிடைக்கும் சூழல் உள்ளது. இந்த நிலையில் விஷால் படமும் வந்தால் எப்படித் தியேட்டர்களை ஒதுக்குவது என திணறிப் போயுள்ளனர் திரையரங்க உரிமையாளர்கள்.