Don't Miss!
- News அவமானப்படுத்திய இன்ஸ்பெக்டர்.. கான்ஸ்டபிள் வேலையை தூக்கி எறிந்து விட்டு யுபிஎஸ்சியில் சாதித்த இளைஞர்
- Finance மிரட்டும் குஜராத், அசராத வளர்ச்சியில் தமிழ்நாடு..!
- Lifestyle பளபளப்பான முகத்திற்கு தயிர்-எலுமிச்சை ஃபேஸ் பேக்கை ட்ரை பண்ணுங்க..!
- Technology சாதா ஹெல்மெட் தூக்கி போடுவாங்க.. வந்தாச்சு ஏசி ஹெல்மெட்.. சில்லுனு காத்து.. இனி வெயிலை சமாளிக்க முடியும்..
- Sports தோனியை சமாதானப்படுத்த முடியாது.. அந்த விஷயத்திற்கு ரிஷப் பண்ட் தான் சரி.. ரோகித் சர்மா கலகல!
- Automobiles ரூ6 லட்சம் தான் கார் விலை, 4 ஸ்டார் ரேட்டிங்கும் இருக்குது! ஆனா சேல்ஸ் சரியாக ஆகல! என்ன கார் தெரியுமா?
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
ஓட்டுப் பெட்டிக்கு பாதுகாப்பு வேணும்!- நடிகர் விஷால் போலீசில் புகார்
நடிகர் சங்கத் தேர்தலில் வாக்குப் பெட்டிக்கு பாதுகாப்பு அளிக்கக் கோரி, சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் விஷால் அணியினர் மனு அளித்தனர்.
பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ள நடிகர் சங்கத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு தினங்களே உள்ளன.
சரத்குமார் அணியும் விஷால் அணியும் மும்முரமாக தேர்தல் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். இப்போது தபால் ஓட்டுப் பதிவு நடக்கிறது. நாளை மறுதினத்துடன் தபால் ஓட்டு முடிகிறது. மொத்தம் 934 தபால் ஓட்டுகள் உள்ளன.
மீதி இருக்கும் உறுப்பினர்கள் நேரடியாக வந்து வாக்களிக்க உள்ளனர். இவர்களில் ரஜினி, கமலும் அடங்கும்.
வாக்குப் பதிவு முடிந்த அன்றே பெட்டிகளைத் திறந்து வாக்குகள் எண்ணப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் வாக்குப் பதிவின்போதே, வாக்குப் பெட்டிகள் சேதமாகும் அல்லது களவாடப்படும் வாய்ப்பு இருப்பதாகக் கூறி, வாக்குப் பெட்டிகளுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு கமிஷனர் அலுவலகத்தில் இன்று விஷால் அணியினர் புகார் அளித்துள்ளனர்.
விஷால், நாசர், பொன்வண்ணன், கருணாஸ் உள்ளிட்டோர் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து புகாரைத் தந்தனர்.