Don't Miss!
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Automobiles பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- News நான் கேட்டது ‘அவள்’.. கடவுள் கொடுத்தது ‘அவல்’.. சரி சாப்டுட்டு வேற வேலையை பார்ப்போம்!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ஐஸ்வர்யா, பச்சன் மருமகள் ஆகியாச்சு: ஆனால் இந்த விவேக், சல்மான் பஞ்சாயத்து மட்டும் ஓயலையே!
மும்பை: பாலிவுட் நடிகர் சல்மான் கானுடனான மனக்கசப்பு பற்றி பேச விரும்பவில்லை என நடிகர் விவேக் ஓபராய் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கும், நடிகர் விவேக் ஓபராய்க்கும் இடையே பல ஆண்டுகளாக பனிப்போர் நடந்து வருகிறது. தனக்கும், ஐஸ்வர்யா ராய்க்கும் இடையேயான நட்பு தொடர்பாக சல்மான் தன்னை மிரட்டுவதாக விவேக் ஓபராய் கடந்த 2003ம் ஆண்டு செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
அதன் பிறகு விவேக் சல்மானிடம் பல முறை மன்னிப்பு கேட்டும் அவர் கண்டுகொள்ளவில்லை. இதனால் அவர்களுக்கு இடையே பனிப்போர் ஏற்பட்டது.
சல்மான்
சல்மான் கான் அண்மையில் மெஹபூப் ஸ்டுடியோவுக்கு சென்றுள்ளார். அங்கு படப்பிடிப்பில் இருந்த கிரேட் கிராண்ட் மஸ்தி படக்குழுவினரை சந்தித்து பேசியுள்ளார்.
விவேக்
கிரேட் கிராண்ட் மஸ்தி படத்தில் விவேக் ஓபராயும் நடித்துக் கொண்டிருக்கிறார். சல்மான் வந்த செய்தி அறிந்த அவர் நைசாக அங்கிருந்து வெளியே சென்றுள்ளார்.
மனக்கசப்பு
பரம எதிரிகளாக இருந்த சல்மானும், ஷாருக்கானுமே பிரச்சனையை மறந்து கட்டிப்பிடித்து நண்பர்களாகிவிட்டனர். நீங்கள் ஏன் இப்படி என்று செய்தியாளர்கள் விவேக்கிடம் கேட்டதற்கு அவர் சிரித்து மழுப்பிவிட்டார்.
பிரச்சனை
எனக்கும், சல்மான் கானுக்கும் இடையே 2003ம் ஆண்டில் பிரச்சனை ஏற்பட்டது. அப்போது என்ன நடந்தது என்று பலருக்கு மறந்துவிட்டது. தற்போது 2015ம் ஆண்டில் உள்ளோம் என்றார் விவேக்.