Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்னார்னு பார்த்துட்டு வாங்க: ஊழியர்களுக்கு 350 டிக்கெட் புக் செய்த கலெக்டர்
வாரங்கால்: பாகுபலி 2 படம் பார்க்க ரசிகர்கள் முந்தியடிக்கும்போது வாரங்கால் மாவட்ட கலெக்டர் 350 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துள்ளார்.
பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா உள்ளிட்டோரை வைத்து ராஜமவுலி இயக்கியுள்ள பாகுபலி 2 படம் நாளை ரிலீஸாக உள்ளது. படத்தை முதல் நாளே பார்த்துவிடும் ஆவலில் ரசிகர்கள் உள்ளனர்.
கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்பது நாளை தெரிந்துவிடும்.
வாரங்கால்
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள வாரங்கால் மாவட்ட கலெக்டர் அம்ரபாலி கட்டா. இளம்பெண்ணான அவர் மிகவும் திறமையாக செயல்படுவதாக முதல்வர் கே. சந்திரசேகர் ராவால் பாராட்டப்பட்டார். அவர் பாகுபலி 2 முதல் நாள் காட்சிக்கு 350 டிக்கெட்டுகள் புக் செய்துள்ளார்.
பாகுபலி 2
வாரங்கால் நகரத்தை 300 அரசு அதிகாரிகள், ஊழியர்கள் நேரம், காலம் பார்க்காமல் அண்மையில் அழகுபடுத்தினர். அவர்களின் கடின உழைப்பை பாராட்டியே அவர்களுக்காக பாகுபலி 2 டிக்கெட்டுகளை புக் செய்துள்ளார் கலெக்டர். நாளை காலை முதல் காட்சியை அவர்கள் கண்டு ரசிக்க உள்ளனர்.
ஆந்திரா
பாகுபலி 2 படம் ஆந்திராவில் தினமும் 6 காட்சிகளும், தெலுங்கானாவில் 5 காட்சிகளுமாக திரையிடப்பட உள்ளது. இதற்கு முறைப்படி மாநில அரசுகளிடம் அனுமதி பெற்றுள்ளார் ராஜமவுலி.
போலீஸ்காரர்
வாரங்காலை சேர்ந்த போலீஸ்காரர் விஜயகுமார் என்பவர் கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்பதை தெரிந்து கொள்ள பாகுபலி 2 படத்தை பார்க்க நாளை விடுப்பு கோரி கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.