Don't Miss!
- News ஆந்திராவில் ஆட்டத்தை ஆரம்பித்த காங்கிரஸ்.. வெளியான லோக்சபா + சட்டசபை வேட்பாளர்கள் பட்டியல்
- Lifestyle 3 முள்ளங்கியும், 1 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செமயா இருக்கும்..
- Sports கடைசி 5 ஓவரில் 97 ரன்கள்.. ஹெலிகாப்டரை பறக்கப்பட்ட ரிஷப் பண்ட்.. பஞ்சரான குஜராத்.. கொந்தளித்த நெஹ்ரா
- Technology நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நீச்சல் தெரியாது: நீரில் மூழ்கி பலியாகும் முன்பு 2 கன்னட நடிகர்கள் பேட்டி
பெங்களூர்: தங்களுக்கு சரியாக நீச்சல் தெரியாது என படப்பிடிப்பின்போது நீரில் மூழ்கி பலியாகும் முன்பு கன்னட நடிகர்கள் உதய் மற்றும் அனில் தெரிவித்தார்கள்.
துனியா விஜய் நடித்து வரும் மஸ்தி குடி கன்னட படப்பிடிப்பின் கிளைமாக்ஸ் காட்சி நேற்று மதியம் பெங்களூர் அருகே உள்ள திப்பகொண்டனஹள்ளி ஏரியில் நடந்தது. விஜய், வில்லன்கள் உதய் மற்றும் அனில் ஆகியோர் ஹெலிகாப்டரில் இருந்து ஏரிக்குள் அதுவும் 100 அடி உயரத்தில் இருந்து குதித்த காட்சி படமாக்கப்பட்டது.
அப்போது விஜய் மட்டும் நீந்தி கரை சேர்ந்தார். உதய் மற்றும் அனில் நீரில் மூழ்கி பலியாகினர்.
அனில்
நீரில் குதிக்கும் காட்சியில் நடிக்கும் முன்பு அனில் டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது கூறுகையில், எனக்கு நீச்சல் சரியாக தெரியாது. முதல் முறையாக உயரத்தில் இருந்து குதிக்கிறேன். அதனால் என்ன நடக்குமோ என படப்படப்பாக உள்ளது என்றார்.
கிணறு
எங்கள் ஊரில் உள்ள கிணற்றில் நீந்தியுள்ளேன். கண் மூடித் திறப்பதற்குள் கிணற்றின் மறுபக்கத்தை அடைந்துவிடலாம். ஆனால் ஏரி பற்றி தெரியவில்லை. ஏரியில் நீந்தியும் பழக்கம் இல்லை என்றார் அனில்.
உதய்
ஏரியில் குதிக்கும் காட்சிக்காக எதுவும் நாங்கள் பயிற்சி எடுக்கவில்லை. மாஸ்டர்கள் உள்ளார்கள். விஜய் இருக்கிறார். வந்திருக்கிறேன். நான், அனில் மற்றும் விஜய் ஏரியில் குதிக்கிறோம். மற்றவை கடவுளின் கையில் உள்ளது என்று உதய் பேட்டியளித்தார்.
பயம்
எனக்கு உயரம் என்றால் பயம். முதல் முறையாக உயரத்தில் இருந்து நீரில் குதிக்கிறேன். அடுக்குமாடி கட்டிடத்தின் முதல் மாடியில் இருந்து கீழே பார்க்கவே பயப்படுவேன். கடவுள் காப்பாற்றுவார் என நினைக்கிறேன் என்று உதய் கூறினார்.