Don't Miss!
- News இந்தியாவில் எந்த ஜாதி, மத மக்களிடம் அதிக தங்கம் இருக்கு தெரியுமா? டாப்பில் இவங்களா? முழு டேட்டா
- Lifestyle கேரளாவின் அடையாளங்களில் ஒன்றான இந்த குட்டி மாட்டின் பால்தான் உலகிலேயே சத்தான பாலாம் தெரியுமா?
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அஜீத், விஜய், ஜெயம் ரவி - 2015ன் மனங்கவர்ந்த நடிகர் யார்?
சென்னை: இந்த ஆண்டு மக்களின் மனங்கவர்ந்த நடிகர் யார்? என்று பிரபல தனியார் செய்தி சேனல்கள் நடத்திய கருத்துக் கணிப்பில் முதலிடம் பெற்றிருக்கிறார் அஜீத்.
ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் மக்களின் மனதைக் கவர்ந்த நடிகர், நடிகையர் யார்? என்று அறிந்து கொள்ள ரசிகர்கள் அனைவருமே ஆவலுடன் காத்திருப்பார்கள்.
அதே போல இந்த வருடமும் மக்களின் மனதைக் கவர்ந்த நடிகர் யார் என்று பிரபலமான 2 தனியார் செய்தி சேனல்கள் மக்களிடம் வாக்கெடுப்பை நடத்தினர்.
இந்த கருத்துக் கணிப்பில் நடிகர்கள் விஜய், அஜித்திற்கிடையே கடும்போட்டி நிலவியது. மேலும் இந்த ஆண்டின் ஹாட்ரிக் நாயகன் ஜெயம் ரவிக்கும் மக்கள் அதிக வாக்குகளை அளித்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று வெளியான கருத்துக் கணிப்புகளின் முடிவில் நடிகர் அஜீத் இந்த ஆண்டின் மனங்கவர்ந்த நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.
இந்த ஆண்டில் வெளியான என்னை அறிந்தால், வேதாளம் ஆகிய 2 படங்களிலும் அஜீத் நடிப்பில் அசத்தியிருந்ததே இதற்குக் காரணம் என்று கூறுகின்றனர்.
மேலும் இந்த ஆண்டின் சிறந்த பாடலாக வேதாளம் படத்தில் இடம்பெற்ற ஆலுமா டோலுமா பாடல் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது.