Don't Miss!
- Finance வீட்டுக் கடன்: EMI செலுத்தாட்டி, வீடு ஏலம் விடப்படுமா? RBI சொல்வது என்ன? வங்கிகளின் அதிகாரம் என்ன?
- News இளையராஜாவுக்கு சான்ஸ் கொடுத்த நாகூர் ஹனீபா.. எம்எல்ஏ ஹாஸ்டலில் "தென்றல் காற்றே" உருவான கதை!
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Automobiles தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நடிகைக்கு திருமணம் நிச்சயமான நேரத்தில் மானபங்கம் ஏன்?: விசாரிக்கும் போலீஸ்
திருவனந்தபுரம்: நடிகைக்கு திருமணம் நடக்க உள்ள நேரத்தில் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது ஏன் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கேரள மாநிலம் கொச்சியில் பிரபல நடிகை ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு காரில் கடத்தப்பட்டு மானபங்கப்படுத்தப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு மலையாள திரையுலகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
திருமணம்
நடிகைக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. திருமணம் நடக்க உள்ள நேரத்தில் திட்டமிட்டு மானபங்கப்படுத்தப்பட்டது ஏன் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
லால்
நடிகையை அந்த கயவர்கள் காரில் இருந்து இறக்கிவிட்டதும் அவர் நேராக மூத்த நடிகரான லாலின் வீட்டிற்கு சென்று அவரிடம் தனக்கு நடந்த கொடுமையை கூறி கதறி அழுதுள்ளார்.
புகார்
நடிகை தனது வருங்கால கணவரிடம் நடந்த சம்பவம் பற்றி தெரிவித்து அவரின் அனுமதியுடனேயே போலீசில் புகார் அளித்ததாக லால் தெரிவித்துள்ளார்.
பிரித்விராஜ்
நடிகைக்கு நடந்த கொடுமை குறித்து அறிந்து முதலில் கோபப்பட்டு பொங்கியவர் நடிகர் பிரித்விராஜ். நடிகைக்கு ஆதரவு தெரிவித்து ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட்டார்.