Don't Miss!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- News நில அளவை சர்வே.. DTCP ஒப்பந்தபுள்ளி தகுதி வரம்பில் திருத்தம் தேவை: முதல்வருக்கு ரியல் எஸ்டேட் கடிதம்
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சிவகார்த்திகேயனுக்கு சம்பளம் கொடுத்து கட்டுப்படியாகல! - 'மனசைத் திறந்தார்' தனுஷ்
சிவகார்த்திகேயனுக்கு சம்பளம் கொடுத்து கட்டுப்படியாகவில்லை என்று கூறியுள்ளார் தனுஷ்.
தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயனுக்கு '3' படத்தில் சினிமா வாய்ப்பு வழங்கியவர் தனுஷ்.
தொடர்ந்து எதிர்நீச்சல் படத்தில் சிவகார்த்திகேயனை வெற்றிகரமான நாயகனாக்கினார். காக்கிச் சட்டையிலும் அவரை ஹீரோவாக வைத்து படம் தயாரித்தார் தனுஷ்.
ஆனால் அந்தப் படத்துக்குப் பிறகு இருவருக்கும் உரசல் என்று தகவல் பரவியது. இதுகுறித்து கேட்கும்போதெல்லாம் இருவருமே பூசி மெழுகி பதில் கூறி வந்தனர்.
இந்த நிலையில் தங்களுக்கிடையிலான கருத்து வேறுபாட்டை சமீபத்தில் வெளிப்படையாகவே கூறிவிட்டார் தனுஷ்.
மீண்டும் சிவகார்த்திகேயனை வைத்து படம் தயாரிப்பீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த தனுஷ், "சிவகார்த்திகேயனுக்கு எங்கள் நிறுவனத்தால் சம்பளம் கொடுத்து கட்டுப்படியாகவில்லை. அதனால்தான் அவரை வைத்து மீண்டும் படம் எடுக்க முடியவில்லை. மற்றபடி அவர் வளர்வது சந்தோஷம்தான்," என்றார்.