Don't Miss!
- News கோவையில் திமுக, அதிமுக ரூ.1000 கோடி செலவு செய்துள்ளனர்.. ஓட்டு போட்ட பின் அண்ணாமலை பகீர் புகார்!
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நான் ஏன் 'ஐ' இசை வெளியீட்டு விழாவுக்கு வரவில்லை?: சுரேஷ் கோபி விளக்கம்
சென்னை: பிரமாண்ட விழாக்களில் தான் கலந்து கொள்வது இல்லை என்றும் அதனால் தான் ஐ பட இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்கவில்லை என்றும் நடிகர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ஐ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் கடந்த திங்கட்கிழமை பிரமாண்டமாக நடைபெற்றது. விழாவில் ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஸ்வார்ஸ்நெக்கர் கலந்து கொண்டார்.
ஆனால் படத்தின் வில்லனான சுரேஷ் கோபி கலந்து கொள்ளவில்லை.
பிரச்சனை
ஷங்கருக்கும், சுரேஷ் கோபிக்கும் இடையே டேட்ஸ் விஷயத்தில் பிரச்சனை ஏற்பட்டதால் தான் அவர் விழாவுக்கு அழைக்கப்படவில்லை என்று கூறப்பட்டது.
சுரேஷ் கோபி
ஐ பட இசை வெளியீட்டு விழாவில் நான் கலந்து கொள்ள மாட்டேன் என தயாரிப்பாளர்களிடம் ஏற்கனவே தெரிவித்தேன் என்றார் சுரேஷ் கோபி.
பிரமாண்டம்
பெரும் செலவு செய்து பிரமாண்டமாக நடக்கும் விழாக்களில் பங்கேற்க எனக்கு விருப்பம் இல்லை. அதனால் தான் ஐ விழாவில் கலந்து கொள்ளவில்லை என்று சுரேஷ் கோபி தெரிவித்தார்.
விளம்பர நிகழ்ச்சி
இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளாவிட்டாலும் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் நிச்சயம் கலந்து கொள்வேன் என சுரேஷ் கோபி கூறினார்.