Don't Miss!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- News நடுவானில் பெங்களூர் விமானத்தை நெருங்கிய எமிரேட்ஸ் விமானம்.. மிக பெரிய விபத்து தவிர்ப்பு! பகீர்
- Automobiles ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
ரஜினி ஏன் தனுஷ் தயாரிப்பில் நடிக்க ஒப்புக் கொண்டார்?
சென்னை: தனுஷ் தயாரிப்பில் ரஜினி நடிக்க மருமகனின் தயாரிப்பு நிறுவனம் மீது உள்ள நம்பிக்கை தான் காரணமாம்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஷங்கர் இயக்கத்தில் 2.0 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு மீண்டும் பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
ரஞ்சித், ரஜினி மீண்டும் கூட்டணி சேரும் படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கிறது.
தனுஷ்
தனுஷுக்கும் இளம் நடிகை ஒருவருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டதால் ஐஸ்வர்யா கவலை அடைந்ததாகவும், அந்த கருமத்தை விட்டுவிட கன்டிஷன் போட்டு தான் ரஜினி தனது மருமகன் தயாரிப்பில் நடிக்க ஒப்புக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
ரஜினி
ரஜினி அந்த சர்ச்சைக்குரிய நடிகையை தனக்கு ஜோடியாக்குமாறு கூறியதாகவும், அப்படி செய்தால் தான் மருமகனையும், அந்த நடிகையையும் தன் நேரடி கண்காணிப்பில் வைக்க முடியும் என்று அவர் நினைத்ததாகவும் கூறப்பட்டது.
இல்லையாம்
ரஜினி தனுஷ் தயாரிப்பில் நடிக்க நடிகை பிரச்சனை காரணம் இல்லையாம். மருமகனின் தயாரிப்பு நிறுவனம் நல்ல படங்களை தயாரிப்பதை பார்த்து தான் அவர் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில் நடிக்க முன்வந்தாராம்.
ரஞ்சித்
ரஞ்சித்துடன் பணியாற்ற ரஜினிக்கு மிகவும் பிடித்துள்ளது. இந்நிலையில் வெற்றிகரமான தயாரிப்பு நிறுவனம் நடத்தும் தனது மருமகனையே தன்னுடைய அடுத்த படத்தை தயாரிக்க வைக்க வேண்டும் என்ற ஆசையில் தான் இவ்வாறு செய்துள்ளாராம் ரஜினி.