Don't Miss!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- News ‛‛பெரிய டாஸ்க்’’.. அண்ணாமலையை அதிகம் நம்பும் பிரதமர்! பாஜக கலந்துரையாடலில் மோடி ஓபன்டாக்!
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
பழி வாங்கப்படுகிறாரா நயன்தாரா?
நயன் தாரா லீட் ரோலில் கலெக்டராக நடித்திருக்கும் அறம் படத்துக்கு சரியான வெளியிட்டாளர் கிடைக்காததால் சிக்கலில் இருக்கிறது என்கிறார்கள். இன்னும் ரிலீஸ் தேதி அறிவிக்காமல் காலம் தாழ்த்துகிறார்கள்.
வெகுகாலம் கழித்து தமிழில் ஒரு ஹீரோயின் லீட் ரோல்களில் ஹீரோக்களுக்கு இணையான கேரக்டர்களில் நடிக்கும் அளவுக்கு வளர்ந்தார். நயன்தாராவுக்கென தனி மார்க்கெட் உருவானது. தனது மார்க்கெட் உயர்வதைக் கண்ட நயனும் தன் சம்பளத்தை சில ஹீரோக்களையெல்லாம் விட அதிகமாக 3 கோடிக்கு மேல் உயர்த்தினார். இப்போது 7 கோடி அளவுக்கு கேட்பதாக சொல்கிறார்கள். இத்தனைக்கும் நயன் லீட் ரோலில் நடித்து மாயா என்ற பேய் படம் மட்டும் தான் ஹிட் அடித்தது.
இனி வெளி தயாரிப்பாளரை லாபம் சம்பாதிக்க விட வேண்டாம் என்று தனது மேனேஜரை பினாமி தயாரிப்பாளராக்கி அவரே தயாரித்த படம்தான் அறம் என்கிறார்கள். விவசாய பிரச்னைகளைப் பற்றி பேசும் இந்த படத்தில் நயன் கலெக்டராக நடிக்கிறார். இந்த படம் தயாரான நேரம் நயன் லீட் ரோலில் நடித்து வெளியான டோரா படம் தோல்வியடைந்தது. அதன் விளைவாக அறம் படம் வெளியாவதில் சிக்கல் என்கிறார்கள். படத்தை வாங்க யாரும் முன்வரவில்லையாம்.
இது கிட்டத்தட்ட ஒரு பழிவாங்கல் என்கிறார்கள். நயன்தாரா தயாரிப்பாளர்களை மதிப்பதில்லை என்று சொல்லப்படுகிறது. கோடிகளைக் கொட்டிக் கொடுத்தும்கூட படத்தின் புரமோஷனுக்காக சிறு துரும்பையும் கிள்ளிக் கூட போடுவதில்லை. எப்போது சிக்குவார் என்று காத்திருந்த திரையுலகத்துக்கு நயன்தாராவின் அறம் படம் கிடைத்திருக்கிறது. இதன் காரணமாகத் தான் நயன் தாராவுக்கு உதவ எந்த தயாரிப்பாளரும் முன்வரவில்லை என்கிறார்கள்.
நயன்தாரா புரமோஷனுக்கு வந்தால் அறம் படத்துக்கு ஒரு விடிவுகாலம் பிறக்கலாம். ஆனால் சொந்தப் படத்துக்கு மட்டும் புரமோஷனுக்கு வருவது என்ன நியாயம்? என்று கண்டனக் குரல்கள் எழும்.
என்ன செய்யப்போகிறார் நயன் என்று பார்ப்போம்!