Don't Miss!
- News கோவையில் திமுக, அதிமுக ரூ.1000 கோடி செலவு செய்துள்ளனர்.. ஓட்டு போட்ட பின் அண்ணாமலை பகீர் புகார்!
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
எவ்வளவோ பிரச்சினைகள் இருக்க, பீப் பாடலுக்கு மக்கள் முக்கியத்துவம் தரவேண்டுமா?- சுஹாசினி மணிரத்னம்
சென்னை: நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்க, மக்கள் பீப் பாடலுக்கு இந்தளவு முக்கியத்துவம் தர வேண்டுமா? என்று நடிகை சுஹாசினி மணிரத்னம் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
சிம்பு, அனிருத் பீப் பாடல் விவகாரத்தில் ஒட்டுமொத்தத் திரையுலகினரும் தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். பெரும்பாலும் தமிழ் சினிமாவில் சிம்புவுக்கு எதிரான சூழலே நிலவுகிறது.
இந்நிலையில் நடிகை சுஹாசினி" நாட்டில் நிறைய பிரச்சினைகள் இருக்கும்போது இப்படி ஒரு பாடலைப் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டுமா?
வெள்ள நிவாரணப் பணியில் இருக்கலாம், ஏதாவது படிக்கலாம். இல்லையெனில் நாட்டில் நடக்கும் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தலாம்.
சமீபத்தில் நமக்காகப் போராடிய 10 பேர் விமான விபத்தில் இறந்து போயிருக்கின்றனர் அதைப் பற்றி பேசலாம். எப்போது பார்த்தாலும் சினிமா, சினிமா என்று சினிமாவிலேயே மக்கள் இருக்க வேண்டாமே". என்று பீப் பாடல் விவகாரத்தில் சுஹாசினி கருத்து தெரிவித்திருக்கிறார்.
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கோட்டூர்புரம் சூர்யா நகரை சுஹாசினி- மணிரத்னம் தம்பதியர் சமீபத்தில் தத்தெடுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.