For Daily Alerts
Don't Miss!
- Lifestyle இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- News ஸ்டாலின் கேட்ட கேள்வி! மேஜையில் இருந்த உளவுத்துறை ரிப்போர்ட! 40ல் வெற்றி உறுதி.. ஆனா.. ஒரு சிக்கலாமே
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
என் கணவரின் மரணத்தில் உள்ள மர்மத்தை வெளிப்படுத்த வேண்டும்! - கலாபவன் மணியின் மனைவி
News
oi-Shankar
By Shankar
|
திருவனந்தபுரம்: என் கணவர் கலாபவன் மணியின் மரணத்தில் உள்ள மர்மத்தை வெளிப்படுத்த வேண்டும் என அவர் மனைவி கேரள அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
கணவரின் உடல் ரசாயன பரிசோதனை அறிக்கை வெளியாகி உள்ள நிலையில், இந்த மரணம் குறித்து உயர் மட்டக் குழு அமைத்து விசாரிக்கவும் தயார் என கேரள முதல்வர் உம்மன் சாண்டி அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் கலாபவன் மணி மனைவி நிம்மி அளித்த பேட்டி:
"எனது கணவர் கலாபவன் மணி வாழ்க்கையின் மிகவும் கஷ்டப்பட்ட முன்னுக்கு வந்தவர். எனவே அவர் ஒருபோதும் தற்கொலை செய்யமாட்டார். அவர் மன உறுதிமிக்கவர். தற்கொலை எண்ணம் அவருக்கு வராது.
சமீப காலமாக அவர் மது அருந்துவதை நிறுத்தி இருந்தார். நண்பர்கள் வற்புறுத்திதான் மது விருந்தில் அவரை மது அருந்த வைத்துள்ளனர். அவரது மரணத்தில் உள்ள மர்மத்தை உலகம் அறியச் செய்ய வேண்டும்", என்றார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Kalabhavan Mani's wife Nimmy urged the govt to expose the mystery in the death of her husband Kalabhvan Mani.
Story first published: Saturday, March 19, 2016, 18:13 [IST]
Other articles published on Mar 19, 2016