Don't Miss!
- News நடிகர் மாரிமுத்து எவ்ளோ பிரில்லியண்ட்! பாஞ்சாலங்குறிச்சி ஓலை பாய் காமெடியில் செய்த சூப்பர் டெக்னிக்
- Lifestyle இந்த 4 ராசிக்காரங்களோட முதல் எதிரியே அவங்க ஈகோதானாம்... ஈகோவாலேயே நிறைய விஷயங்களை இழந்துருவாங்களாம்!
- Sports பவுலர்களை குறி வைத்து அடித்தேன்.. பதிரானாவிடம் எச்சரிக்கையாக இருந்தோம்.. ஸ்டாய்னிஸ் ஓபன் டாக்!
- Finance மோனாலிசா ஓவியத்தை பாட வைத்த மைக்ரோசாப்ட் ஏஐ vasa -1.. அசரவைக்கும் வீடியோ..!
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இந்த ஆவி(குமார்)யாவது உதயாவைக் காப்பாற்றுமா?
சென்னை: கரண் மற்றும் பிரபு இணைந்து நடித்த திருநெல்வேலி திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் உதயா. 15 ஆண்டுகளாக நடித்துக் கொண்டிருக்கும் இவர், நாயகனாக நடித்து இன்று திரைக்கு வந்திருக்கும் படம் ஆவிகுமார்.
தமிழ் சினிமாவில் தொட்டுத் தொடரும் பாரம்பரியம் போல தொடர்ந்து வருகிறது பேய்களின் படங்கள், அந்த வரிசையில் இன்று வெளியாகி இருக்கும் ஆவிகுமார் திரைப்படத்திலும் பேய்களைப் பற்றித்தான் கூறியிருக்கிறார்கள்.
இந்தத் திரைப்படம் எனது சினிமா வாழ்க்கையை மாற்றும் என்று படம் வெளிவருவதற்கு முன்பு நம்பிக்கை தெரிவித்து இருந்தார் நடிகர் உதயா, ஆவிகுமார் உதயாவின் நம்பிக்கையை காப்பற்றி இருக்கிறதா? என்று பார்க்கலாம்.
ஆவிகுமார் கதை
படத்தோட தலைப்பே கதையை சொல்லும். ஆவி அமுதா மாதிரி, நம்ம ஹீரோ குமார் ஆவியோட பேசறவர்.
இவரோட திறமை தொலைக்காட்சி மூலமா ஊருக்கே தெரிய மலேசியாவில ஒரு நிகழ்ச்சி நடத்தறதுக்கு வாய்ப்பு வருது, ஹீரோ மலேசியா போறார். அங்கே மக்கள் முன்னிலையில நிகழ்ச்சி நடத்தும் போது ஒரு கொலையைக் கண்டுபிடிக்கிறாரு ஹீரோ.
அந்தக் கொலையை யார் செய்தது? இதுதான் படத்தோட கதை. ஹீரோயினே இல்லையான்னு யோசிக்கிறீங்களா... கொல்லப்பட்டவரே ஹீரோயின்தான்!
ஆவிகுமார் - உதயா
இந்தப் படத்தில் நன்றாக நடித்திருக்கிறார் உதயா. மலேசியாவுக்கு நிகழ்ச்சி நடத்த சென்றவர் அந்தக் கொலையைச் செய்தது யார் என்று கண்டுபிடிக்க மலேசியாவில் வீடு எடுத்துத் தங்குகிறார். அவர் தங்கும் வீட்டில் நாயகி கனிகா சவுத்ரி பேயாக நடமாட அவரைப் பற்றி கண்டுபிடிக்க முயல்வது, கண்டுபிடிக்கும் முயற்சியில் சிக்கல்கள் வர அதனை சரிசெய்து மேலும் முயற்சிகள் எடுப்பது என்று படத்தைத் தாங்கி இருக்கிறார். ஆவிகுமார் உதயாவிற்கு நிச்சயம் சொல்லிக் கொள்ளும் படம்தான்.
அழகான பேய் -கனிகா திவாரி
அழகான கனிகா திவாரியை முதல் படத்திலேயே ஆவியாக நடமாட விட்டிருக்கிறார்கள், பேய்களுக்கு உரிய எந்த மேக்கப்பும் இல்லாமல் அழகான பேயாக வந்து போகிறார் நாயகி.அவர் பேய் என்று மக்கள் நம்புவதற்காக கூந்தலை மட்டும் பறக்க விட்டிருப்பது நன்று.
துடிப்பான காவலர்- நாசர்
மலேசியா போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் நாசர், வழக்கம் போல தனது கம்பீரமான நடிப்பை இந்தப் படத்திலும்
அளித்திருக்கிறார். மூடநம்பிக்கையை மறுக்கும் போதும், உதயாவின் மூலம் உண்மைகள் அறியும் போது அதனை ஏற்று நாயகனுக்கு ஆதரவாக இருப்பது என்று கச்சிதமாக ஜொலித்திருக்கிறார்.
சொதப்பிய 2 இசையமைப்பாளர்கள்
படத்தில் ஸ்ரீகாந்த் தேவா, விஜய் ஆண்டனி என்று 2 இசையமைப்பாளர்கள் இசையமைத்திருக்கிறார்கள். ஆனால் 2 பேர் இசையமைத்தும் கூட பாடல்களும் பின்னணி இசையும்மனதில் நிற்கவில்லை என்பது படத்திற்கு பெரிய பலவீனம். பேய்ப் படத்திற்கு பலமே மிரட்டும் இசைதான், இசையில் கோட்டை விட்டதால் படத்தின் ஓட்டைகள் பெரிதாகத் தெரிகின்றன.
காண்டிபன் - குறி தவறி விட்டது
சிற்சில இடங்களில் கவரும் இயக்குநர் இன்னும் சற்று மெனக்கெட்டிருந்தால் ஆவிகுமார், எல்லோரையும் கவர்ந்து இழுத்திருக்கும் படமாக அமைந்து இருக்கும். எடுத்துக் கொண்ட கதையில் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யாதது படத்தில் குறையாகத் தேங்கி நிற்கிறது, மேலும் ஏற்கனவே வெளிவந்த பேய்ப் படங்களின் நெடியும் ஆங்காங்கே சற்று பலமாக வீசுவதால் ஆவி குமார் அரைத்த மாவாகி விட்டிருக்கிறது.
-
குடிக்கிற காஃபியில் எதையோ கலந்த நடிகை.. பேச முடியாமல் திணறிய ரஜினி.. குட்டி பத்மினி சொன்ன சீக்ரெட்
-
Rajinikanth: அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள்.. வைரலாகும் ரஜினி பட பாடல் வரிகள்!
-
எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே.. ரஜினியின் 171 ஆவது பட டைட்டில் கூலி.. ரசிகர்கள் செம வரவேற்பு