Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
நட்சத்திர கிரிக்கெட்டுக்கு அஜீத் வருவாரா? - பொன் வண்ணன் சொல்வதைக் கேளுங்க!
நடிகர் சங்க நிதி திரட்டும் கிரிக்கெட் நிகழ்ச்சியில் அஜீத் கலந்து கொள்வாரா? கடந்த ஒரு வாரமாக படு சூடாக நடந்து வரும் இணைய வெளி விவாதம் இது.
இதற்கு பிள்ளையார் சுழி போட்டதே நமது ஒன் இந்தியாதான். தொன்னூறுகளில் நடந்த சிங்கப்பூர் கலை நிகழ்ச்சியில் அஜீத் பங்கேற்க மறுத்ததோடு, நடிகர் சங்கத்துக்காக மக்களிடம் பணம் வசூலிக்கக் கூடாது என்று கூறி, தன் சொந்தப் பணத்தைக் கொடுக்க முன் வந்தார்.
இந்த ப்ளாஷ்பேக்கை நாம் வெளியிட்ட பிறகு, அதுவே புதிய செய்தி மாதிரி இணைய வெளியில் வலம் வந்து கொண்டிருக்கிறது.
ஆக, இந்த நட்சத்திரக் கிரிக்கெட்டையும் அஜீத் புறக்கணிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து நடிகர் சங்க துணைத் தலைவர் பொன்வண்ணனிடம் கேட்ட போது, "அவர் வருவாரா மாட்டாரா என்பதெல்லாம் அவரது தனிப்பட்ட விஷயம். நாங்கள் யாரையும் வற்புறுத்தவில்லை.
நடிகர் சங்கம் கலை நிகழ்ச்சிகள் மூலம் மக்களிடம் பணம் வசூலிப்பதும், அதைக் கொண்டு நல்லகாரியங்கள் செய்வதும் காலகாலமாக நடப்பதுதான்.
சென்னை வெள்ளம் உள்பட பல மக்கள் பிரச்சினைகளுக்காக நடிகர்கள் எவ்வளவோ செய்திருக்கிறார்கள்.
இப்போது எங்கள் சக கலைஞர்கள் நலனுக்காக ஒரு நிகழ்ச்சி நடத்துகிறோம்," என்றார்.