Don't Miss!
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ஜல்லிக்கட்டுக்கு வழி பிறக்கலேன்னா... ஓபிஎஸ்ஸை முற்றுகையிடுவோம்!- இயக்குநர் கவுதமன்
சென்னை: பிரதமரைச் சந்தித்த பிறகும் ஜல்லிக்கட்டு நடக்க வழி பிறக்காவிட்டால் சென்னை திரும்பும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை முற்றுகையிடுவோம் என்று இயக்குநர் கவுதமன் கூறினார்.
ஜல்லிக்கட்டுக்காக தமிழகத்தில் போராட்டம் உச்ச கட்டத்தை அடைந்துள்ளது. மாணவர்கள், இளைஞர்கள் களத்தில் குதித்துள்ளதால், பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அலங்காநல்லூரில் நடந்த போராட்டத்தின் போது இயக்குநர் கவுதமன் மற்றும் போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதோடு, அவர்களை கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி அலங்காநல்லூர் மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து, அவர்களை காவல்துறையினர் விடுவித்தனர்.
இந்த நிலையில், சென்னை மெரினாவில் நடந்து வரும் போராட்டத்தில் இயக்குநர் கவுதமன் பங்கேற்றுள்ளார். போராட்டக்காரர்கள் மத்தியில் இன்று பேசிய அவர், "ஜல்லிக்கட்டுக்காக அவசர சட்டம் இயற்றக் கோரி பிரதமர் மோடியை சந்திக்க முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றுள்ளார். பிரதமரை சந்தித்த பிறகும் ஜல்லிக்கட்டு நடத்த வழி பிறக்காவிட்டால் சென்னை திரும்பும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை முற்றுகையிடுவோம்," என்றார்.