Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
யுவன் ஷங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி ரத்தாக ஏ.ஆர். ரகுமான் காரணமா?
சென்னை: ஏ.ஆர்.ரகுமானின் நெஞ்சே எழு இசை நிகழ்ச்சியால் தற்போது யுவன் ஷங்கர் ராஜாவின் வாய்ஸ் ஆப் யுவன் நிகழ்ச்சி தள்ளிப் போயிருக்கிறது.
சென்னை மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நெஞ்சே எழு என்கின்ற இசை நிகழ்ச்சியை ஏ.ஆர்.ரகுமான் நடத்தி வருகிறார்.
கடந்த 16 ம் தேதி சென்னையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி அடுத்ததாக வருகின்ற 23 ம் தேதி கோவையில் நடைபெறவிருக்கிறது.
நெஞ்சே எழு
முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஏஆர்.ரகுமான் சென்னை மழை, வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நெஞ்சே எழு என்கிற இசை நிகழ்ச்சியை பெரு நகரங்களில் நடத்தி வருகிறார்.
கோவை
கடந்த 16 ம் தேதி சென்னையில் நடைபெற்ற இந்த இசை நிகழ்ச்சி அடுத்ததாக வருகின்ற 23 ம் தேதி கோவையில் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் நெஞ்சே எழு காரணமாக யுவனின் 'வாய்ஸ் ஆப் யுவன்' இசை நிகழ்ச்சி தற்போது தள்ளிப் போயிருக்கிறது.
|
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்
இது தொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "யார்ஸ் மீடியா நெட்வொர்க் என்கின்ற எங்களது நிறுவனம் மூலமாக யுவன் ஷங்கர் ராஜாவின் வாய்ஸ் ஆப் யுவன் இசை நிகழ்ச்சியை வருகின்ற 23ம் தேதி கோவையிலும், 26 ம் தேதி மதுரையிலும் நடத்தத் திட்டமிட்டு இருந்தோம்.
எதிர்பாராதவிதமாக
ஆனால் 23 ம் தேதி ரகுமானின் நெஞ்சே எழு நிகழ்ச்சி கோவை நகரில் நடைபெறுகிறது. இதனால் யுவனின் இசை நிகழ்ச்சியை நாங்கள் தள்ளிவைக்கிறோம். மேலும் எதிர்பாராமல் நடந்த இந்த செயலுக்காக நாங்கள் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்.
புதிய தேதிகளை
விரைவில் வாய்ஸ் ஆப் யுவன் இசை நிகழ்ச்சியின் புதிய தேதிகளை நாங்கள் வெளியிடுவோம். நீங்கள் ஏற்கனவே டிக்கெட் வாங்கியிருந்தால் அதற்குரிய பணம் விரைவாக உங்களுக்கு திருப்பி அளிக்கப்படும்" என்று தெரிவித்து இருக்கின்றனர்.
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்