Don't Miss!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- News ஆந்திராவில் ஆட்டத்தை ஆரம்பித்த காங்கிரஸ்.. வெளியான லோக்சபா + சட்டசபை வேட்பாளர்கள் பட்டியல்
- Lifestyle 3 முள்ளங்கியும், 1 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செமயா இருக்கும்..
- Sports கடைசி 5 ஓவரில் 97 ரன்கள்.. ஹெலிகாப்டரை பறக்கப்பட்ட ரிஷப் பண்ட்.. பஞ்சரான குஜராத்.. கொந்தளித்த நெஹ்ரா
- Technology நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அன்பானவன் அடங்காதவன் அசராதவன்... ரொம்ப கொடூரமானவன்!
-எஸ் ஷங்கர்
ஒரு படத்தை எப்படியெல்லாம் எடுக்கக் கூடாது என்பதை இரண்டரை மணி நேரம் உட்காரவைத்து வகுப்பெடுத்திருக்கிறார்கள் சிம்புவும் ஆதிக் ரவிச்சந்திரனும்.
இரட்டை அர்த்த வசனம், ஆபாச, அறுவறுப்பான காட்சிகள், எரிச்சலூட்டும் செய்கைகள் என வேண்டாத அத்தனையையும் விலை கொடுத்து அன்பானவன் அடங்காதவன் அசராதவன் என்ற இந்தப் படத்தில் வைத்திருக்கிறார் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்.
சிம்புவும், இயக்குநரும் தெரிந்தேதான் இந்த மாதிரி காட்சிகளை வைத்திருக்கிறார்களா? எடுத்த படத்தை ஒரு முறை கூட இருவரும் முழுசாகப் பார்க்கவில்லையா? என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன இந்த அஅஅ என்ற கொடுமையை அனுபவித்த பிறகு.
கதை? அப்படி ஏதாவது இருந்தால்தானே சொல்ல!
சிம்பு ஒருதலையாக ஸ்ரேயாவைக் காதலிக்கிறார். பின்னர் ஸ்ரேயாவும் காதலிக்கிறார். இருவரும் ஓடிப் போய் கல்யாணம் செய்து கொள்ளலாம் என முடிவெடுக்கும் நேரத்தில் சிம்பு போலீசில் சிக்கிக் கொள்கிறார். பின்னர் வயதான பிறகு தமன்னாவைக் காதலிக்கிறார்... இப்படி தாறுமாறாக காதலிக்கிறார்... தோல்வி காணுகிறார். உடனே அட்வைஸ் பண்ண ஆரம்பித்துவிடுகிறார். முடியல... இதுல இரண்டாம் பாகம் வேறயாம்!
மூன்று வேடங்கள் சிம்புவுக்கு. ஒன்றிலாவது பார்க்கிற மாதிரி இருக்கணுமே. நாயகிகள் ஸ்ரேயா, தமன்னாவை சரக்குக்கு ஊறுகாய் ரேஞ்சுக்குப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
பெண்களை இதைவிட கேவலமாக சித்தரிக்க முடியாது. அவ்வளவு மோசம். காதலியை வெளிப்படையாகவே 'மேட்டருக்கு' வா என்கிறார்கள். கொட்டாவி மூலம் காதலிக்கும் டெக்னிக்கை ரூம் போட்டு யோசித்திருப்பார்கள் போலிருக்கிறது.
ஒய் ஜி மகேந்திரன் போன்ற காலாவதியான பார்ட்டிகளை விட்டு காமெடி பண்ண வைத்திருக்கிறார்கள். காதும் மூஞ்சும் எரிகிறது. கோவை சரளா, மொட்டை ராஜேந்திரன் கடுப்பேற்றுகிறார்கள்.
யுவன் ஒருவர்தான் மெனக்கெட்டு இசை அமைத்து இருக்கிறார். மற்றபடி இந்தப் படத்தைப் பற்றி மேற்கொண்டு எழுத நினைத்தால், திட்டிக் கொண்டேதான் இருப்போம்.
சிம்புவின் கேரியரில் இனி முயன்றாலும் இப்படி ஒரு மோசமான சினிமாவைத் தர முடியாது. அவ்வளவு 'சிறப்ப்பான' படம் இது.