Don't Miss!
- News அண்ணாமலை வேட்பு மனுவில் செய்த 2 மிகப்பெரிய தவறு.. திமுக எதுவுமே பேசல.. கொந்தளித்த நாதக வழக்கறிஞர்!
- Technology Jio-வை பொலி போட்ட BSNL.. ரூ.600 க்கு 4000GB டேட்டா.. 125 Mbps ஸ்பீட்.. இலவச OTT.. 2 புதிய திட்டங்கள் அறிமுகம்!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Finance முதல்ல மகன், இப்போ அம்மா.. காங்கிரஸ் விட்டு விலகிய சாவித்ரி ஜிண்டால்..!!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
திறப்பு விழா - விமர்சனம்
மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டத்தில் உயிரையே தியாகம் செய்யும் பெண்ணின் கதை தான் திறப்பு விழா.
குடிப்பவர்களை வில்லன்களாக சித்தரித்த காலம் போய் இன்று குடித்தால் தான் ஹீரோ என்பது போன்ற படங்கள் வந்துகொண்டிருக்கின்ரன. இந்த சூழ்நிலையில் குடிக்கு எதிராக போராடும் இளம் ஜோடிகளைப் பற்றி படம் எடுத்ததற்காகவே இயக்குநர் கேஜி.வீரமணிக்கு பாராட்டுக்கள்.
கீனணூர் என்ற கிராமத்துக்கு மதுக்கடை விற்பன்னராக வரும் ஹீரோ ஜெய் ஆனந்த் மதுவால் சீரழியும் மக்களை திருத்த நினைக்கிறார். அவர் மீது கொலைப்பழி விழுகிறது. அவர் ஏன் ஊருக்கு வந்தார் என்று தனது குடும்ப கதையை சொல்கிறார். பின்னர் ஊரே ஜெய் ஆனந்த் வழியில் மதுவை எதிர்க்கிறது. அந்த ஊரை விட்டு மது எப்படி ஒழிந்தது என்பது க்ளைமாக்ஸ்.
ஹீரோவாக ஜெய் ஆனந்த்.கிராமத்து கதாபாத்திரத்துக்கு பொருத்தமான ஆள். ஹீரோயின் ரஹானா ஜெய் ஆனந்தை காதலிக்கும் கேரக்டர். இறுதியில் மதுவை எதிர்த்து உயிரை விடும்போது பரிதாபத்தை ஏற்படுத்துகிறார்.
காமெடி என்ற பெயரில் இடையில் சேர்த்திருக்கும் காட்சிகள் எதுவுமே எடுபடவில்லை.
நல்ல டைட்டில் பிடித்து திரைக்கதையிலும் வேகம் கூட்டியிருந்தால் திறப்பு விழாவுக்கு கூட்டம் சேர்ந்திருக்கும்.
- ஆர்ஜி