Don't Miss!
- Lifestyle இந்த 4 ராசிக்காரங்க சிறந்த பாலியல் துணையாக இருப்பார்களாம்... இவங்க வாழ்க்கைத்துணையா கிடைக்க அதிர்ஷ்டம் வேணும்!
- News சென்னையை சுற்றி 128 ரயில் நிலையங்களில் வருகிறது சூப்பர் வசதி.. இன்னும் 3 மாதத்தில் எல்லாமே மாறுது
- Technology அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மீண்டும் தொடங்கும் 10 எண்றதுக்குள்ள ஷூட்டிங்!
சென்னை: விக்ரம் ஹீரோவாக நடித்து வரும் 10 எண்றதுக்குள்ள படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் 16 ம் தேதி மீண்டும் தொடங்கும் என்று படக்குழுவினர் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து உள்ளனர்.
சமீப காலமாக விக்ரம் நடித்து வரும் படங்கள் தொடர்ந்து பிரச்சினைகளில் சிக்குகின்றன. இதனால் தான், அவரின் படங்கள் தள்ளிப் போகின்றன என்று ஒரு பேச்சு தமிழ்த் திரையுலகில் எழுந்தது.
இதனை நிரூபிப்பது போன்று அடுத்தடுத்து அவரின் படங்களுக்கு பிரச்சினைகள் முளைத்தன. இதனால் விக்ரமுடன் இணைந்து சமந்தா நடித்து வந்த 10 எண்றதுக்குள்ள படத்தின் படப்பிடிப்பு இடையில் சிறிது நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது, தற்போது மீண்டும் படப்பிடிப்பு துவங்க உள்ளது.
10 எண்றதுக்குள்ள
ஐ படத்திற்குப் பின்பு விக்ரமின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 10 எண்றதுக்குள்ள, கோலிசோடா வெற்றிப் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் விஜய் மில்டன் இயக்கும் 2 வது படம் இது.
விக்ரம் - சமந்தா
இந்தப் படத்தில் முதன்முறையாக விக்ரமுடன் இணைந்து நடித்து வருகிறார் நடிகை சமந்தா, இதனால் திரையில் இவர்கள் இருவரின் கெமிஸ்ட்ரியைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
நின்றுபோன படப்பிடிப்பு
இடையில் விக்ரம் சந்தித்த சில பிரச்சினைகளின் காரணமாக படப்பிடிப்பு கொஞ்ச காலம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. படம் அக்டோபர் மாதம் 2 ம் தேதி வெளியாகும் என்றுமுன்பே அறிவித்திருந்தனர். ஆனால் 10 எண்றதுக்குள்ள படத்தின் படப்பிடிப்புகள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை, படப்பிடிப்பு நடைபெறாமல் வெளியீடு எப்படி சாத்தியம் என்று ஆங்காங்கே முணுமுணுப்புகள் எழுந்தன.
|
படப்பிடிப்பு ஆகஸ்டில் துவங்கும்
தற்போது படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் 16 ம் தேதி மீண்டும் தொடங்கும் என்று படப்பிடிப்புக் குழுவினர் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து உள்ளனர்.
ராஜஸ்தானில் சண்டைக் காட்சிகள்
படத்தின் கிளைமாக்ஸ் மற்றும் சில சண்டைக் காட்சிகள் இன்னும் எடுக்கப்படவிருக்கிறது என்றும் , இந்தக் காட்சிகளை ராஜஸ்தானில் படமாக்கப் போவதாகவும் அறிவித்து உள்ளனர்.
இந்தப் படம் முடிந்த பின்னர்தான் அடுத்த படம்
இந்தப் படத்தின் படபிடிப்பை முடித்து விட்டுத் தான் அடுத்த படத்தில் நடிக்கப் போகிறாராம் விக்ரம், அனேகமாக அது அரிமாநம்பியை இயக்கிய ஆனந்த் சங்கரின் படமாக இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.
-
விர்ஜினிட்டியை எப்போ இழந்த?.. மகனை பார்த்து கேட்குற கேள்வியா இது மலைகா அரோரா.. தீயாக பரவும் வீடியோ!
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
என்னை துரத்த நினைச்சாங்க.. விவேக் சார் இல்லைன்னா நடிச்சிருக்கவே மாட்டேன்.. கொட்டாச்சி உருக்கம்!