Don't Miss!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- News முட்டையை உடைத்து ஆப்ஃபாயில் போடாதீங்க! போலீஸ் பிடிக்கும்.. சேலத்தில் நடந்ததை பாருங்க
- Automobiles "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
கமல்ஹாசனின் சுனாமி
தசாவதாரம் படத்திற்காக கடலோரத்தில் செட் போட்டு சுனாமியால் பாதிக்கப்பட்டது போன்ற பகுதியை பிரமாண்டமாக உருவாக்கி அசத்தி வருகிறார்களாம்.
கமல்ஹாசன் 10 வேடங்களில் நடிக்க உருவாகி வரும் படம் தசாவதாரம். படத்தின் முக்கால்வாசி காட்சிகளை ஷூட் செய்து முடித்து விட்டனர். மீதமுள்ள காட்சிகளை சென்னையில் வைத்து சுடவுள்ளனர்.அதில் முக்கியமான ஒரு காட்சி சுனாமி. இந்தக் காட்சியை தத்ரூபமாக கொண்டு வர வேண்டும் என்பதற்காக சென்னை ராயபுரம் அருகே கடலோரத்தில் பிரமாண்ட செட் போட்டு எடுக்கவுள்ளனர்.
கடலையே செட் போட்டு படம் பிடிக்கவுள்ளனராம். இதுவரை இப்படி ஒரு கடல் செட் இந்திய சினிமா வரலாற்றில் போடப்பட்டதில்லை என்கிறார்கள். தோட்டாதரணியின் கைவண்ணத்தில் இந்த கடல் செட் போடப்படுகிறது.
பரிந்து விரிந்த கடல், சுனாமியால் சேதமடைந்த வீடுகள் போல செட் போடப்படுகிறதாம். இந்தப் பணி படு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விரைவில் இங்கு படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாம். படத்தின் மிகவும் முக்கியமான ஹைலைட்டான காட்சியாக இது இருக்குமாம்.
இதுதவிர மேலும் சில காட்சிகள் படமாக்கப்படவுள்ளன. அதை முடித்து விட்டால் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெறுமாம்.
அனைத்துப் பணிகளையும் முடித்து வருகிற தீபாவளியன்று தசாவதாரத்தை திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளனராம்.