Don't Miss!
- News சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார்.. ஏற்புடையது இல்லை.. மோடியை நேரடியாக அட்டாக் செய்த எடப்பாடி
- Lifestyle இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாதாம்... ஏன் தெரியுமா?
- Finance முகேஷ் அம்பானி ஸ்டிரிக்ட் ஆர்டர்..!! 'இங்க' தான் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம்..!
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Technology பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பெர்மிஷன் இல்லாம ஷூட்டிங்கா... நிறுத்து... கார்த்திக் மகன் கவுதமின் "ரங்கூனுக்கு" வந்த சோதனை!
சென்னை: முறையான அனுமதி பெறாமல் படப்பிடிப்பு நடத்தி, போக்குவரத்திற்கு இடையூறு செய்ததால் கௌதம் கார்த்திக்கின் ரங்கூன் படப்பிடிப்பிற்கு போலீஸ் தடை விதித்த சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
நடிகர் கார்த்திக் மகனான கவுதம் கார்த்திக் தற்போது ரங்கூன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை வியாசர்பாடி பிவி காலனியில் உள்ள வீட்டில் நடைபெற்றது.
அப்போது படப்பிடிப்பை நேரில் காணும் ஆர்வத்தில் அங்கு ஏராளமான மக்கள் குவிந்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு எம்.கே.பி. நகர் போலீசார் விரைந்து படப்பிடிப்பு குழுவினரிடம் படப்பிடிப்பை நிறுத்துமாறு கூறினர். இதுதொடர்பாக போலீசாருக்கும், படக்குழுவினருக்கும் திடீர் வாக்குவாதம் ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து அனுமதியில்லாமல் படப்பிடிப்பு நடத்தக் கூடாது என படப்பிடிப்பிற்கு போலீசார் தடை விதித்தனர். இதனால், படிப்பிடிப்பை ரத்து செய்து விட்டு படக்குழுவினர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.