Don't Miss!
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- News "மகளிர் உரிமை தொகை வரல.." அமைச்சரை பேச விடாமல் நிறுத்திய பெண்.. மேடையில் அடுத்து நடந்த பரபர சம்பவம்
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
செப்டம்பர் 17-ம் தேதி மலேசியா புறப்படுகிறார் ரஜினி.. 18-ம் தேதி படப்பிடிப்பு தொடங்குகிறது!
ரஜினி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் 18-ம் தேதி மலேசியாவில் தொடங்குகிறது. அதற்கு ஒரு நாள் முன்பாகவே மலேசியா புறப்படுகிறார்கள் ரஜினியும் படக்குழுவினரும்.
ரஞ்சித் இயக்கும் இந்தப் படம் ஆகஸ்ட் முதல் வாரமே தொடங்கிவிடும் என்று முதலில் கூறப்பட்டது.
மலேசியாவில் படப்பிடிப்பு நடத்தத் தேவையான இடங்களையெல்லாம் ஏற்கெனவே பார்த்து முடிவு செய்துவிட்டனர்.
இந்த நிலையில் படப்பிடிப்பை ஒரு மாதத்துக்கு தள்ளிப் போட்டுள்ளார் ரஜினி. இப்போது வெளிநாடு சென்றிருக்கும் இயக்குநர் ரஞ்சித், திரும்பி வந்ததும், படத்தின் நடிகர் நடிகைகளை இறுதி செய்யவிருக்கிறார்கள். இந்தப் படத்தில் நாயகியாக ராதிகா ஆப்தேவும், முக்கிய வேடங்களில் பிரகாஷ் ராஜ், நாசர், கலையரசன், தினேஷ் போன்றவர்களும் ஏற்கெனவே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
செப்டம்பர் 17-ம் தேதி மலேசியா புறப்படுகிறார் ரஜினி. அவருக்கு முன்பே படக்குழுவின் ஒரு பகுதி மலேசியா செல்கிறது. ரஜினியுடன் இயக்குநர், தயாரிப்பாளர் உள்ளிட்ட குழுவும் பயணிக்கிறது.
40 நாட்கள் அங்கு முதல் கட்டப் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது. இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடக்கும் என்று தெரிகிறது.