Don't Miss!
- Finance இனி சுங்கச் சாவடிகளில் நிற்க வேண்டியதில்லை! வருகிறது ஜிபிஎஸ் தொழில்நுட்பம்..!
- Automobiles கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
- Sports வீடியோ- கட்டி பிடிக்க வந்த மலிங்கா.. தள்ளி விட்ட ஹர்திக் பாண்டியா..மும்பை அணியில் என்ன தான் நடக்குது
- News "மத்திய அரசை விமர்சிக்காதது ஏன்?" இரண்டு நொடி கேப் விட்டு.. எடப்பாடி பழனிசாமி தந்த விளக்கம்
- Technology ஏர்டெல் காலி.. மாதாந்திரம் ரூ.141 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. 5ஜி டேட்டா.. அன்லிமிட் வாய்ஸ் கால்கள்!
- Lifestyle இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
படப்பிடிப்பில் கடலுக்குள் விழுந்தார் சத்யன்!
கே சந்துரு இயக்கத்தில் ஜெய், நிவேதா தாமஸ் நடிக்கும் படம் 'நவீன சரஸ்வதி சபதம்'.
மலேசியாவில் உள்ள ரெடாங் என்ற தீவில் இப்படத்தை படமாக்கியபோது தீவின் கரையில் கடலில் விழுந்துவிட்டாராம் நடிகர் சத்யன். இதுகுறித்து இயக்குனர் கே.சந்துரு கூறுகையில், "நவீன சரஸ்வதி சபதம்' ஒரு வித்தியாசமான காமெடி படம். இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் உள்ள ரெடாங் தீவில் 25 நாட்கள் நடந்தது. கடலில் சுமார் 4 மணி நேரம் படகு சவாரி செய்துதான் ரெடாங் தீவுக்கு செல்லமுடியும். அந்த தீவில் இரண்டு ரிசார்ட்ஸ் மட்டும்தான்.
அங்கு படப்பிடிப்பு நடத்த சென்றபோது கடலுக்குள் சத்யன் விழுந்துவிட்டார். எங்களின் பாதுகாப்புக்காக ஒரே ஒரு படகுதான் வரும். சத்யன் கடலில் விழுந்ததும் அவருக்கு நீச்சல் தெரியும் என்று அசட்டையாக இருந்துவிட்டனர்.
ஆனால் விழுந்து சிறிதுநேரம் வரை சத்யன் வெளியே வராததால் நாங்கள் பயந்து கூச்சல் போட்டு சத்யனை தேடச் சொன்னோம். அதன்பிறகு அவர்கள் கடலுக்குள் குதித்து சத்யனை மீட்டனர். பாதுகாப்புக்கு வந்தவர்கள் அவருக்கு சில முதலுதவிகளை செய்து அவரை பழைய நிலைமைக்கு கொண்டு வந்தனர். அதன்பிறகு படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்தார் சத்யன்," என்றார்.
Actor Sathyan was drown to Malaysian sea during the shoot of Naveena Saraswathi Sabatham.