Don't Miss!
- Finance ஐசிஐசிஐ வங்கி கஸ்டமரா நீங்க.. மொபைல் ஆப்-ல் கோளாறு.. கிரெடிட் கார்டு தரவுகள் திருடுபோகும் அச்சம்!!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- News நேருவும், இந்திராவும் முட்டாள்கள் இல்லை.. பாஜகவின் மொழி கொள்கைக்கு ஜேஎன்யு துணைவேந்தர் எதிர்ப்பு
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
இதுவரை உலகம் அறிந்திராத கேரள இருண்ட வனத்தில் “உறுமீன்” சூட்டிங்!
சென்னை: கேரளாவின் ஆள்நடமாட்டமில்லாத அடர்ந்த காட்டுப்பகுதிகளில் பெரும் இடையூறுகளைத் தாண்டி படமாக்கப்பட்டுள்ளதாம் பாபி சிம்ஹாவின் "உறுமீன்" திரைப்படம்.
ஆக்சிஸ் பிலிம் பேக்டரி சார்பில் ஜி.டி.டில்லிபாபு தயாரிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் உறுமீன்.
இதில் ஜிகர்தண்டா புகழ் பாபி சிம்ஹா நாயகனாகவும், மெட்ராஸ் புகழ் கலையரசன் வில்லனாகவும் நடிக்கின்றனர். நாயகியாக ரேஷ்மிமேனன் நடிக்க முக்கிய வேடங்களில் அப்புக்குட்டி, காளிவெங்க, மனோபாலா ஆகியோர் நடிக்கின்றனர்.
சக்திவேல் பெருமாள்சாமி இதனை இயக்கியுள்ளார். அச்சு இசையமைக்க இந்தப் படத்துக்கு ரவீந்திரநாத்குரு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இரண்டு வித்தியாசமான கதைக்களங்களில் பயணிக்கும் திரைக்கதை இன்றைய பொருளாதார பின்னணியை மையமாகக் கொண்டது. சமீபத்தில் இத்திரைப்படத்தின் உச்சகட்ட காட்சி கேரளாவின் அடர்ந்த வனப்பகுதியில் படமாக்கப்பட்டது. இதற்குமுன் இத்தகைய இடங்களில் யாரும் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
படப்பிடிப்பு வேலைகள் முடிந்துவிட்ட நிலையில் படத்தை மே மாதம் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். அதற்கு முன்பாக படத்தின் டிரைலரினை ஜனவரி இறுதி வாரத்தில் வெளியிட இருக்கிறார்கள். படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி கேரளா, பாண்டிச்சேரி மற்றும் மியான்மர் ஆகிய இடங்களில் நடந்து முடிந்திருக்கிறது.