twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    20 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட இடத்துக்கு அருகில் நடந்த புலி ஷூட்டிங்

    By Shankar
    |

    ஆந்திராவில் 20 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட இடத்துக்கு வெகு அருகில் விஜய்யின் புலி பட ஷூட்டிங் நடந்துள்ளது.

    ‘புலி' திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆந்திரப் பகுதிகளில் நடந்து வருகிறது. இதில் படத்தின் கதாநாயகி ஸ்ருதி ஹாசன், விஜய் ஆகியோர் நடிக்கும் காட்சிகள் திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை படமாக்கப் பட்டன.

    Vijay's movie shoot near 20 Tamils killed spot

    அதே நாளில்தான் திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் ஆந்திர போலீசார் என்கவுன்ட்டர் என்ற பெயரில் தமிழகத்தைச் சேர்ந்த மரம் வெட்டும் தொழிலாளர்கள் 20 பேரை படுகொலை செய்தனர்.

    அன்றைய தினம் மாலை படப் படிப்பை முடித்துக் கொண்டு திருப்பதிக்கு திரும்பி வந்து கொண் டிருந்த படப்படிப்பு குழுவினர், தலக்கோணம் பகுதி உட்பட பல இடங்களில் தீவிர வாகன சோதனை நடப்பதை அறிந்து விசாரித்தனர்.

    அப்போது படப்பிடிப்பு நடைபெற்ற இடத்திலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில்தான் அந்த கோரப் படுகொலை நடந்தது தெரிந்து அதிர்ச்சியடைந்தனர்.

    English summary
    Vijay's Puli movie shoot was held near the forest area where 20 Tamils were killed by Andhra Police.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X