Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
'கத்திச்சண்டை'யால் காயம் பட்ட விஷால்... படக்குழுவினர் அதிர்ச்சி!
சென்னை: 'கத்திச்சண்டை' படத்தின் சண்டைக் காட்சியில் நடித்த விஷாலுக்கு தோள்பட்டையில் அடிபட்டது. எனினும் அதனைப் பொருட்படுத்தாமல் அவர் தொடர்ந்து நடித்து வருகிறார்.
மருதுவைத் தொடர்ந்து விஷால் தற்போது சுராஜ் இயக்கத்தில் 'கத்திச்சண்டை' படத்தில் நடித்து வருகிறார்.இதில் விஷாலுடன் இணைந்து தமன்னா, வடிவேலு, சூரி, ஜெகபதி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் சண்டைக் காட்சி ஒன்றைப் படமாக்கியபோது விஷாலின் தோள்பட்டையில் அவருக்கு அடிபட்டது.
இதனைத் தொடர்ந்து அருகிலிருந்த மருத்துவமனையில் விஷாலுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. காயம் பட்டாலும் கூட படப்பிடிப்பில் விஷால் கலந்து கொண்டு நடித்து வருகிறார்.
இந்த விபத்து குறித்து விஷால் ''தோள்பட்டையில் அடிபட்டுள்ளது. பெரிய அளவில் காயமில்லை. மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறேன் என்று கூறியிருக்கிறார்.
அடிபட்டும் விஷால் படப்பிடிப்பில் கலந்து கொண்டது படக்குழுவினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
மற்றொருபுறம் விஷாலின் மருது, 'ராயுடு' என்ற பெயரில் இன்று தெலுங்கு மொழியிலும் வெளியாகியிருக்கிறது. 500 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான ராயுடுவுக்கு தெலுங்கிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.