Don't Miss!
- Sports 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
- News 8 வருஷமாக கட்டப்பட்டு வந்த பாலம்.. வேகமா காற்றடித்ததில் உடைந்து விழுந்தது.. தெலுங்கானாவில்
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Automobiles குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
2.ஓ அப்டேட்... 'சிட்டி' தலைமையில் பிரமாண்ட போர்க் காட்சி!
ரஜினிகாந்தின் அடுத்த மெகா ரிலீசான 2.ஓவின் க்ளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. இந்த க்ளைமாக்ஸில் ரஜினி பங்கேற்கும் காட்சிகளை கடந்த மே மாதமே எடுத்துவிட்டார் ஷங்கர்.
இப்போது மனிதர்களுடன் ரோபோக்கள் மோதும் பிரமாண்ட போர்க் காட்சியை படமாக்கி வருகிறார் ஷங்கர்.
இதற்காக சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் மைதானத்தில் ஏகப்பட்ட பீரங்கி வண்டிகளை நிறுத்தியிருந்ததை அந்தப் பகுதிவாசிகள் வியப்போடு பார்த்துச் சென்றனர்.
இந்தக் காட்சிப்படி சிட்டி ரஜினி தலைமையில் ஏகப்பட்ட ரோபோக்கள், பீரங்கி வண்டிகளை துவம்சம் செய்கின்றன. இதற்காக வெடிக்கப்பட்ட டம்மி பீரங்கி குண்டுகள் அந்தப் பகுதி மக்களை கொஞ்சம் மிரட்டிவிட்டதென்னவோ உண்மை.
எந்திரன் க்ளைமேக்ஸில் வரும் சண்டைக் காட்சியில் ரஜினி வடிவிலிருந்த ரோபோக்கள் ஏகப்பட்ட அவதாரமெடுத்து மிரள வைக்கும். அந்தக் காட்சியை ஷங்கரே டிசைன் செய்திருப்பார்.
2.ஓவில் அதைவிட வித்தியாசமாக இந்த சண்டைக் காட்சியை எடுத்து வருகிறார் ஷங்கர். இதையும் அவர்தான் டிசைன் செய்துள்ளார்.
செப்டம்பர் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்திலிருந்து ரஜினியும் ஷூட்டிங்குக்கு திரும்புகிறார்.