Don't Miss!
- News பள்ளிக்கரணை ஆணவக் கொலையால் இறந்த கணவன்.. துக்கம் தாளாமல் விஷம் குடித்து தற்கொலை செய்த மனைவி
- Automobiles இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
- Technology பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- Finance 15-15-15 ரூல் பயன்படுத்தி ரூ. 1 கோடி பெறுவது எப்படி? இதை நோட் பண்ணுங்க!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மீண்டும் குசேலன் பஞ்சாயத்து!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த குசேலன் படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. இப்படத்தால் பெரும் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாக தியேட்டர் உரிமையாளர்கள் குரல் கொடுத்தனர்.
இதை ஈடு கட்டாவிட்டால் ரஜினிகாந்த், கே.பாலச்சந்தர் படங்களுக்கு ஒத்துழைப்பு தர மாட்டோம் எனவும் எச்சரித்தனர். இதையடுத்து பேச்சுவார்த்தை நடந்தது. ரஜினியும், தியேட்டர் உரிமையாளர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசினார். இதையடுத்து சமரசம் ஏற்பட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் மீண்டும் குசேலன் விவகாரம் தலை தூக்கியுள்ளது.
நஷ்டத்திற்கு ஈடாக ரஜினிகாந்த் கொடுப்பதாக கூறியிருந்த தொகை சில தியேட்டர் உரிமையாளர்களுக்கு இன்னும் வரவில்லையாம். இதையடுத்து இதை வழங்கக் கோரி ரஜினியை வலியுறுத்த தியேட்டர் உரிமையாளர்கள் முடிவெடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக விவாதிக்க தமிழகம் முழுவதும் உள்ள தியேட்டர் உரிமையாளர்கள் 13ம் தேதி சென்னையில் கூடி முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளனர்.கூட்டத்திற்கு தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அண்ணாமலை தாங்குகிறார்.
இக்கூட்டத்தில் குசேலன் நஷ்ட ஈட்டை விரைவில் வழங்க வேண்டும் என்று கோரி தீர்மானம் போடவுள்ளனர். இதுதொடர்பாக மேல் நடவடிக்கை இருக்குமா, அது தொடர்பாக தீர்மானம் போடப்படுமா என்பது குறித்து்த் தெரியவில்லை.