Don't Miss!
- Automobiles ஃபார்ச்சூனர் கார் என்றாலே நம்ம மக்களுக்கு தனி பிரியம்!! விலை அதிகமா இருந்தாலும் ஷோரூமுக்கு படை எடுக்குறாங்க!
- News நிலைமை கைமீறிடுச்சி.. அமெரிக்கா, யு.கேவிற்கு போன அதிகாரபூர்வ அணு அட்டாக் வார்னிங்! யார் அனுப்புவது?
- Lifestyle Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
- Finance வீட்டுக் கடன்: EMI செலுத்தாட்டி, வீடு ஏலம் விடப்படுமா? RBI சொல்வது என்ன? வங்கிகளின் அதிகாரம் என்ன?
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இன்று இளையராஜா பிறந்த நாள்... குவிந்தனர் ரசிகர்கள்!
இன்று இளையராஜாவின் பிறந்த நாளையொட்டி, அவரைப் பார்க்கவும், அவருடன் படமெடுத்துக் கொள்ளவும் ஏராளமான ரசிகர்கள் சென்னையில் குவிந்தனர்.
காமராஜர் அரங்கில் 'மேஸ்ட்ரோ மியூசிக்' சார்பில் இன்று நடக்கும் இளையராஜா பிறந்த நாள் கொண்டாட்டத்தில் அவர்கள் கலந்து கொண்டு ராஜாவை வாழ்த்தினர்.
ஏராளமான ரசிகர்கள் மாலைகள், பூங்கொத்துகளுடன் ராஜாவைச் சந்தித்து வாழ்த்துக் கூறினர். காலை 9 மணி முதல் 11 மணி வரை இந்த நிகழ்ச்சி நடந்தது.
இதே காமராஜர் அரங்கில் இன்று பிற்பகலில் டாக்டர் கு ஞானசம்பந்தன் தலைமையில், இசைஞானியின் இசை செவியோடு கலப்பதா? உயிரோடு கலப்பதா? என்ற தலைப்பில் சிறப்பு பட்டி மன்றம் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியிலும் இளையராஜா பங்கேற்கிறார்.
இன்று மாலை பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இளம் இசைக் கலைஞர்கள் பங்கு பெறும் இசை நிகழ்ச்சி நடக்கிறது.
இன்று கவிக்கோ அப்துல் ரகுமான் காலமானதால் பிறந்த நாள் கொண்டாட்டங்களை ஆர்ப்பாட்டமில்லாமல் நடத்துமாறு கேட்டுக் கொண்டார் இளையராஜா.