Don't Miss!
- Sports என்னங்க சொல்றீங்க? சிஎஸ்கேக்கு வருகிறாரா ஆஸி. வேகம் ஹேசல்வுட்.. உண்மை என்ன?
- News தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கும் இன்று லோக்சபா தேர்தல்: மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஏஆர் ரஹ்மான் ஒப்புக் கொண்ட ஆறு தமிழ்ப் படங்கள்!
இதில் முதலில் வரவிருக்கும் படம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான்தான் (படம் முதலில் வராவிட்டாலும் பாட்டு வந்துவிடும் எனத் தெரிகிறது!). செப்டம்பர் அல்லது தீபாவளிக்கு இந்தப் படம் வருகிறது.
இன்னொரு முக்கியமான படம் மணிரத்னம் இயக்கும் கடல். ரொம்ப விசேஷமாக, படப்பிடிப்பு நடக்கும் கடல்புரத்துக்கே போய் பாடல்களை உருவாக்கியுள்ளார் இசைப் புயல்.
இவை தவிர, விஜய் நடிக்கும் யோஹன், தனுஷ் நடிக்கும் மரியான், கோச்சடையானுக்குப் பின் ரஜினி தொடங்கவிருக்கும் புதிய படம் என ஆறு படங்கள். கவுதம் மேனனின் சீரியல் ஒன்றிற்கும் இசை தர அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து ரஹ்மான் கூறுகையில், "நான் தமிழில் கடந்த ஆண்டு பணியாற்றாமல் இருந்ததற்கு எந்த காரணமும் இல்லை. சூழ்நிலை அப்படி அமைந்துவிட்டது. அதனை ஈடு செய்யும் வகையில் இந்த ஆண்டு பாடல்கள் தந்துவிடுவேன்," என்கிறார் தனக்கே உரிய புன்னகையுடன் ரஹ்மான்!