Don't Miss!
- News ஏசியை கழுத்தில் மாட்டி சுற்றாத குறையாக பயன்படுத்துறீங்களா? இந்த தவறை மட்டும் செய்யாதீங்க!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Finance கிரெடிட் கார்டு வச்சு இருக்கீங்களா? அப்போ முதல்ல இதை படிங்க.. ரொம்ப முக்கியம்!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
'கல்யாணம் முதல் காதல் வரை' ப்ரியா ரசிகாஸ்: உங்களுக்கு ஒரு 'குட் நியூஸ்'
சென்னை: கல்யாணம் செய்து கொண்டு ஆஸ்திரேலியாவில் செட்டிலாகப் போகும் கல்யாணம் முதல் காதல் வரை ப்ரியாவுக்கு விஜய் டிவி நிர்வாகம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளதாம்.
விஜய் டிவியில் எத்தனையோ நெடுந்தொடர்கள் ஒளிப்பரப்பானாலும் கல்யாணம் முதல் காதல் வரை தொடருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். அதற்கு காரணம் தொடரின் நாயகி ப்ரியா. ப்ரியா, ப்ரியா என்று ரசிகர்கள் கொண்டாடி வந்த நேரத்தில் அவர் அந்த தொடரில் இருந்து விலகினார்.
இந்த செய்தி அறிந்து ரசிகர்கள் அப்படியே ஷாக் ஆகிவிட்டனர்.
ப்ரியாவை காணோமே
கல்யாணம் முதல் காதல் வரை ப்ரியாவை காணவில்லையே என ரசிகர்கள் கவலையில் இருந்தனர். அப்பொழுது தான் அவர் அந்த தொடரில் இருந்து விலகியதன் காரணம் தெரிய வந்தது.
திருமணம்
ப்ரியா ஆஸ்திரேலியாவில் வேலை பார்க்கும் ராஜவேலை காதலித்து வருகிறார். அவரை விரைவில் திருமணம் செய்து கொண்டு ஆஸ்திரேலியாவுக்கு செல்ல உள்ளதால் கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் இருந்து விலகியுள்ளார்.
ரசிகர்கள்
கல்யாணம் ஆனால் என்ன ப்ரியா தொடர்ந்து நடிங்க ப்ளீஸ் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர். எத்தனையோ பேர் திருமணத்திற்கு பிறகும் நடிக்கவில்லையா, நீங்க திரும்பி வரணும் என்று ரசிகர்கள் அன்பு கோரிக்கை விடுத்துள்ளனர்.
விஜய் டிவி
ப்ரியாவை காணாமல் ரசிகர்கள் புலம்புவதை பார்த்த விஜய் டிவி நிர்வாகம் அடடா இவருக்கு இவ்வளவு மவுசா என்று வியந்திருக்கிறது. இதையடுத்து திருமணத்திற்கு பிறகும் நீங்கள் நடிப்பை தொடர வேண்டும் என ப்ரியாவுக்கு விஜய் டிவி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளதாம்.
முடிவு
மீண்டும் நடிக்க வருவதும், இல்லை ஒரு தடவை முடிவு செஞ்சா என் பேச்சை நானே கேட்க மாட்டேன் என சொல்வதும் ப்ரியாவின் கையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.