Don't Miss!
- News ‛‛குழந்தைகளை தண்டிக்க கூடாது’’.. NCPCR ரூல்ஸ்ஸை அமல்படுத்த பள்ளி கல்வித்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. 50MP செல்பி கேமரா.. OZO ஆடியோ.. அறிமுகமானது HMD போன்கள்.. எந்த மாடல்?
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
பாலகுமாரனின் தலையணைப் பூக்கள் கதை... ஜீ தமிழில் சீரியலாகிறது
சென்னை: பிரபல எழுத்தாளர் பாலகுமாரனின் பிரசித்தி பெற்ற நாவலான தலையணைப்பூக்கள் நாவல் இப்போது சீரியலாக ஒளிபரப்பாக உள்ளது. ஜீ தமிழ் சேனலில் விரைவில் தலையணைப் பூக்கள் ஒளிபரப்பாகும் என்று ஜீ தமிழ் தொலைக்காட்சியின் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது.
எழுத்தாளர் பாலகுமாரனின் எழுத்துக்களுக்கு தனி ரசிகர்கள் இருக்கின்றனர். அவரது ரசிகர்கள் அவரை எழுத்துச் சித்தர் என்றுதான் அழைக்கின்றனர். 150 நாவல்கள், 100 சிறுகதைகள் எழுதியுள்ள பாலகுமாரன், 14 திரைப்படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதியுள்ளார்.
பிரமண சமுதாய கதாபாத்திரங்களைப் பற்றிய கதைகளும், சரித்திர நாவல்களும் அதிகம் எழுதியுள்ளார் பாலகுமாரன். தலையணைப் பூக்கள் பாலகுமாரன் அவர்கள் எழுதிய குடும்ப நாவல்.
Renowned writer Balakumaran's #ThalayanaiPookaal - coming soon only on #ZeeTamil ,Watch first look videohttps://t.co/E84i7dgZCk
— Zee Tamil (@ZeeTamil) April 12, 2016
கிராமத்தில் இருந்து விவசாய நிலங்களை விற்றுவிட்டு நகரத்துக்கு வரும் தந்தை தனது மகன்கள் உதவியுடன் மங்கலம் அண்ட் கோ எனப்படும் ஒரு தொழில் சாம்ராஜ்யத்தை உருவாக்குகிறார். அவரும் அவரது மகன்களும் சந்திக்கும் வெற்றி தோல்விகள் மற்றும் அவர்களது சொந்த வாழ்வில் நிகழும் சம்பவங்கள் தான் கதை. இன்றைய சீரியலுக்கு சரியான கதை என்பதால் இதை தேர்வு செய்திருக்கிறார்கள்.
பெண் வாசனையே இல்லாத வீடு அது அந்த வீட்டிற்கு மருமகளாக வரும் நிஷாவினால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகிறது என்பதுதான் சீரியலின் முக்கிய அம்சம்.
இந்த சீரியலில் அப்பாவாக டெல்லி குமார், மகன்களாக ஸ்ரீ, ஸ்ரீகர் ஆகியோர் நடிக்கின்றனர். மருமகளாக நடிக்கிறார் நிஷா. சன் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி தெய்வமகள் தொடரில் தங்கையாக நடித்த நிஷா, தற்போது மகாபாரதம் தொடரில் பாஞ்சாலியாக நடிக்கிறார்.
முதன்முறையாக தமிழ் சீரியல் ஒன்றில் ஹீரோயினாக நடிக்கிறார் நிஷா. பாலகுமாரன் கதை என்பதால் தலையணைப்பூக்கள் சீரியல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.