Don't Miss!
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்.. இன்று நடக்கப்போகும் மாற்றம்? பின்னணி
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Automobiles சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
என்னை திட்டினா நான் சந்தோசப்படுவேன்... வில்லி கவுரி லட்சுமி
சென்னை: நல்ல நடிக்கிறீங்க என்று சொன்னால் நடிகைகள் சந்தோசப்படுவார்கள். ஆனால் பெண்கள் திட்டினால் சந்தோசப்படுவேன் என்கிறா பொம்மலாட்டம் வில்லி கவுரி லட்சுமி. நடிப்புடன் சொந்த ஊரான திருப்பூரில் பியூட்டி பார்லரும் தொடங்கியிருக்கிறாம்.
திருப்பூரை சேர்ந்த கவுரி, உள்ளூர் சேனலில் தொகுப்பாளர் பணியை தொடங்கி சன் மியூசிக் சேனலில் நுழைந்து
இப்போது சீரியல், சினிமா என வலம் வருகிறார்.
சன் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த போது, ஏவி.எம் நிறுவனத்தில் ‘வைராக்யம்'என்ற சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்தது. தொடர்ந்து பொம்மலாட்டம் தொடரில் வில்லி கதாபாத்திரம் கிடைத்தது. கெட்டியா பிடிச்சுட்டேன் என்று கூறியுள்ளார்.
முழு நேர சீரியல் நடிகை
கோபமே வராத பொண்ணு நான், ஆனால் வில்லியாக நடிப்பது எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது என்கிறார்.
எனக்கு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது ரொம்ப பிடிக்கும் என்று கூறும் கவுரி இப்போது முழுநேர சீரியல் நடிகையாகி விட்டார்.
காஞ்சனாவில் தோழி
காஞ்சனா 2 படத்தில் கங்காவின் தோழியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதனால்தான் அப்போது சீரியலுக்கு முழுக்க பிரேக் விட்டுட்டு போயிருந்தேன். அப்போதுதான் பொம்மலாட்டம் தொடரில் நடிக்க அழைப்பு வந்தது. வில்லத்தனமான நடிப்பு ரசிகர்களுக்கு பிடித்து விட்டது என்கிறார்.
திட்டுவது சந்தோசம்
பொம்மலாட்டம் தொடரில் நடிக்க ஆரம்பித்த போது பிறகு ஸ்ரீஜா அக்கா, ஸ்ரீ அண்ணா இருவரும் பயிற்சி கொடுத்தார்கள். இப்போது எல்லோரும் திட்டும் அளவிற்கு நடிக்கிறேன். அந்த பாத்திரத்துக்காக இன்னைக்கு எல்லார்கிட்டயும் திட்டு வாங்கறது சந்தோஷமா இருக்கு என்கிறார் கவுரி
பியூட்டி பார்லர்
பிசினஸ் செய்யவேண்டும் என்பது சிறுவயதில் இருந்தே எனக்குள்ள கனவு. அந்த கனவை விட்டுக்கொடுக்க கூடாது என்பதற்காக என் சொந்த ஊரான திருப்பூரில் பியூட்டி பார்லர் ஆரம்பிச்சிருக்கேன். அடுத்து சென்னையிலும் மற்ற நகரங்களிலும் இதைத் தொடங்கும் திட்டம் இருக்கிறது என்கிறார் கவுரி.
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
என்னை துரத்த நினைச்சாங்க.. விவேக் சார் இல்லைன்னா நடிச்சிருக்கவே மாட்டேன்.. கொட்டாச்சி உருக்கம்!
-
சூரியன் படத்துல சரத்குமாருக்கு பதில் இவரா?.. கவுண்டமணி சரியான நக்கல் புடிச்ச ஆளு.. பவித்ரன் பேட்டி!